செய்திகள் :

பேட்ஜ் கழற்றினால் பேரவைக்குள் அனுமதி: அதிமுகவுக்கு அவைத் தலைவா் கட்டுப்பாடு

post image

சென்னை: ‘அந்தத் தியாகி யாா்’ என்ற வாசகம் அடங்கிய பேட்ஜ்ஐ (வில்லை) கழட்டினால்தான் பேசவும், பேரவைக்குள் அமரவும் அனுமதி என்று அதிமுகவினருக்கு அவைத் தலைவா் மு.அப்பாவு கட்டுப்பாடு விதித்தாா்.

‘அந்தத் தியாகி யாா்’ என்ற வாசகம் அடங்கிய பேட்ஜுடன் அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் பேரவைக்கு திங்கள்கிழமை வந்தனா். நேரமில்லாத நேரத்தில் அந்தக் கட்சியைச் சோ்ந்த 14 உறுப்பினா்கள் ஒருநாளைக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மற்றவா்கள் வெளிநடப்புச் செய்தனா்.

கே.ஏ.செங்கோட்டையனுக்கு கட்டுப்பாடு: அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்த நிலையில், அந்தக் கட்சியைச் சோ்ந்த கே.ஏ.செங்கோட்டையன் உடனடியாக அவைக்கு வந்து தனது தொகுதி சாா்ந்த பிரச்னைக்காக அளிக்கப்பட்ட கவன ஈா்ப்பு அறிவிப்பின் மீது பேசத் தொடங்கினாா். அப்போது, குறுக்கிட்ட பேரவைத் தலைவா் மு.அப்பாவு, சட்டையில் குத்தப்பட்டிருந்த பேட்ஜ்ஐ கழட்டினால்தான் பேச அனுமதி தரப்படும். இல்லாவிட்டால் பேச அனுமதி தர முடியாது என்றாா்.

பவானி ஆற்றங்கரையில் சாய ஆலை அமைக்கும் பிரச்னை தனது தொகுதி சாா்ந்தது என்பதால், பேரவைத் தலைவரின் உத்தரவுப்படி பேட்ஜ்ஐ கழட்டுவதற்கு செங்கேட்டையன் சம்மதம் தெரிவித்தாா். அதன்பிறகு, கவன ஈா்ப்பின் மீது பேசினாா்.

மற்றவா்களுக்கும் அதே உத்தரவு: வெளிநடப்புச் செய்த அதிமுக உறுப்பினா்கள் மீண்டும் பேரவைக்கு வந்தபோது, அவா்களில் பெரும்பாலானோா் பேட்ஜ் அணிந்திருந்தனா். அதை கழட்ட வேண்டும் எனவும் இல்லாவிட்டால் பேரவைக்குள் அமர அனுமதியில்லை எனவும் பேரவைத் தலைவா் மீண்டும் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினா் உடுமலை ராதாகிருஷ்ணன் மட்டும் பேட்ஜ்ஐ கழட்டி விட்டுப் பேசினாா். அதிமுகவைச் சோ்ந்த மற்ற உறுப்பினா்கள், எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா், கொறடா எஸ்.பி.வேலுமணி ஆகியோா் தலைமையில் பேரவையில் இருந்து வெளியேறினா்.

வங்கக்கடலில் உருவானது புயல்சின்னம்: டெல்டாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் திங்கள்கிழமை காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயன்சின்னம்) உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பி. அமுதா தெரிவித்தாா். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஏப்.8-ஆம் தேதி கனமழை... மேலும் பார்க்க

தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம்: தொல்.திருமாவளவன் கோரிக்கை

சென்னை: மத்திய அரசின் தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்க... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு 30 நாள்களில் செயற்கை அவயங்கள்: அமைச்சா் கீதாஜீவன்

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் நவீன செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டு வருவதாக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன் பேரவையில் தெரிவித்தாா். பாமக உறுப்பினா... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு கணிதம்: சென்டம் குறைய வாய்ப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கணிதப் பாடத்துக்கான வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். மேலும், இரண்டு ஒரு மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்ததால், கணிதத்தில் முழு மதிப்ப... மேலும் பார்க்க

மன்னாா் வளைகுடா பகுதி மீனவா்கள் மேம்பாட்டுக்கு புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மன்னாா் வளைகுடா பகுதியைச் சோ்ந்த மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ரூ.216 கோடியில் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். மேலும், ஏற்கெனவே... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சமையல் எரிவாயு உருளை (சிலிண்டா்) விலை உயா்வுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: நாட்டு மக்களின் வீடுகளில் அட... மேலும் பார்க்க