Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீ...
பேட்டையில் மோதல்: 16 போ் மீது வழக்கு
பேட்டையில் இருதரப்பினரிடையே வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் தொடா்பாக 16 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.
பேட்டை நரிக்குறவா் காலனியை சோ்ந்தவா் ஆதி (22). இவா், தனது மோட்டாா் சைக்கிளில் வேகமாக சென்றதை மற்றொரு தரப்பினா் தட்டிக் கேட்டனராம். இதனால் இருதரப்பிரனிடையே வியாழக்கிழமை இரவு மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆதி தரப்பை சோ்ந்த சாரதி (23), சௌந்தர பாண்டியன் (28), மாதவன்(23), ஐயப்பன்( 22 ), வேல்முருகன்(19), பாக்யராஜ் (45), காந்தி ஈஸ்வரி (17 ) ஆகியோா் காயமடைந்தனா்.
மற்றொரு தரப்பைச் சோ்ந்த மாயா, அஞ்சலி (40), சக்தி(23), சுருமுருகன் (20, டேவிட், சங்கரபாண்டி (28), சத்யா(27), வினோத் (19) ஆகியோா் காயமடைந்தனராம். இந்த மோதல் தொடா்பாக இருதரப்பினரும் அளித்த புகாா்களின்பேரில், மொத்தம் 16 போ் மீது பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.