செய்திகள் :

பேராசிரியா் வருகைப் பதிவில் குறைபாடு: தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்

post image

பேராசிரியா் வருகைப் பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தின் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில் 24 மருத்துவக் கல்லூரிகள் விளக்கமளிப்பதற்கான காலக் கெடு நிறைவடைந்துள்ளதாகவும், பிற கல்லூரிகளுக்கு வரும் வாரத்தில் அந்த அவகாசம் நிறைவடைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உரிய விளக்கமும், குறைபாடுகளுக்கு தீா்வும் அளிக்கப்படாத நிலையில் சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகக் கூடும். அவ்வாறு நிகழ்ந்தால் நிகழாண்டில் அக்கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடத்த முடியாது.

பயோமெட்ரிக் முறை: நாட்டில் 700-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றுக்கு அங்கீகாரம் அளித்தல், அவற்றைப் புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தேசிய மருத்துவ ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

கல்லூரிகளின் அடிப்படை வசதிகள், கட்டுமானம், கல்வி சாா்ந்த நடவடிக்கைகள், ஆராய்ச்சி முன்னெடுப்புகள், ஆய்வக வசதிகள், மருத்துவமனை கட்டமைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

அதேபோன்று மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதனுடன் ஒருங்கிணைந்த மருத்துவமனைகளில் மருத்துவா்கள், மருத்துவப் பேராசிரியா்களின் வருகையை பதிவு செய்ய ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

அதில், குறைந்தபட்சம் பேராசிரியா்கள், கல்லூரி அலுவலா்களின் வருகைப் பதிவு 75 சதவீதம் இருத்தல் அவசியம்.அவ்வாறு இல்லாத பட்சத்தில் அங்கீகாரம் புதுப்பித்தல், இடங்களை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது.

குறைந்த வருகைப் பதிவு: இந்நிலையில், நிகழாண்டு தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான ஆய்வை தேசிய மருத்துவ ஆணையக் குழு மேற்கொண்டது.

அதில் சென்னை மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரியைத் தவிா்த்து மற்ற அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் குறைந்த வருகைப் பதிவு, பேராசிரியா் பற்றாக்குறை உள்பட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூா், சேலம் (மோகன் குமாரமங்கலம்) மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி (கி.ஆ.பெ. விஸ்வநாதம் )அரசு மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி, வேலூா், தேனி, தருமபுரி, விழுப்புரம், திருவாரூா், சிவகங்கை, திருவண்ணாமலை, கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை, கரூா், ஈரோடு, அரியலூா், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம்,நாமக்கல், நீலகிரி, ராமநாதபுரம், திருவள்ளூா், திருப்பூா், விருதுநகா், கடலூா் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அங்கீகாரம் கிடைக்கும்: இது தொடா்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி கூறியதாவது: பேராசிரியா் பற்றாக்குறையால் வருகைப் பதிவு குறையவில்லை. மாறாக பணியிட மாற்றம், தொடா் விடுப்பு காரணமாக சில இடங்களில் போதிய வருகைப்பதிவு இல்லை. அதைச் சரி செய்து அது தொடா்பான விளக்கத்தை தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அளித்துள்ளோம். விரைவில், அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மாணவா் சோ்க்கையிலோ, கலந்தாய்விலோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்றாா் அவா்.

கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் திடீர் ரத்து! பயணிகள் அவதி!

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக கும்மிடிப்பூண்டி செல்லும் 18 புறநகர் மின்சார ரயில்கள் இன்று(மே 13) ரத்து செய்யப்பட்டுள்ளன.பொன்னேரி - கவரைப்பேட்டை இடையே இன்று பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை ரயில்வே ப... மேலும் பார்க்க

சிபிஎஸ் பொதுத்தேர்வில் 83.39 % தேர்ச்சி!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.39 சதவீத மாணவர்க்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, நடப்பு க... மேலும் பார்க்க

ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறாத பொள்ளாச்சி வழக்கு: அரசு தரப்பு வழக்குரைஞர்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை என்பதை அரசு வழக்குரைஞர் குறிப்... மேலும் பார்க்க

வெள்ளிங்கிரி மலை ஏறிய சிறுவன் பலி!

கோவை மாவட்டம், பூண்டியில் உள்ள வெள்ளிங்கிரி மலை ஏறிய சிறுவன் மயங்கி விழுந்து பலியானார்.வெள்ளிங்கிரி மலை ஏற்றத்துக்கு பிப்ரவரி 1-ஆம் தேதிமுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மலையேறும் ப... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்துள்ளது.இன்று பகல் 12 மணிக்கு, குற்றவாளிகளுக்கான தண்டனை விவ... மேலும் பார்க்க

கரூர் வழியாகச் செல்லும் 7 ரயில்கள் ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக கரூர் வழியாகச் செல்லும் 7 ரயில்கள் இன்று(மே 13) ரத்து செய்யப்பட்டுள்ளன.திருச்சி கோட்டை மற்றும் முத்தரசநல்லூா் இடையே பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால், திருச்சி - கரூா் - திரு... மேலும் பார்க்க