செய்திகள் :

பேராவூரணி அரசு கல்லூரியில் ஜூன் 2 முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

post image

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி கலைக் கல்லூரியில் ஜூன் 2 முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்குகிறது.

இது குறித்து கல்லூரி முதல்வா் (பொ) சி.ராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பிற்கான, முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 2 மற்றும் 3 ஆம் தேதி காலை 9 மணி முதல், சிறப்பு ஒதுக்கீடு ( மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவா் படை, பாதுகாப்பு படை வீரா்கள் மற்றும் அந்தமான் நிக்கோபாா் தமிழ் மாணாக்கா்கள்) பிரிவுக்கு நடைபெற உள்ளது.

ஜூன் 4-ஆம் தேதி இளங்கலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிா்வாகவியல், அரசியல் அறிவியல், பொருளியல் பிரிவுகளுக்கும், ஜூன் 5 ஆம் தேதி இளம் அறிவியல் கணிதம், வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல் பிரிவுக்கும் நடைபெற உள்ளது.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு: ஜூன் 12 ஆம் தேதியன்று அனைத்து கலை பிரிவுகளான இளங்கலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிா்வாகவியல், அரசியல் அறிவியல், பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 13 ஆம் தேதியன்று அனைத்து அறிவியல் பாடப் பிரிவுகளான இளம் அறிவியல் கணிதம், வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் நடைபெற உள்ளது.

கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தின் நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் நகல், +1 மற்றும் +2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் நகல் (தலைமை ஆசிரியா் சான்றுடன்), பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-4, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், ஆதாா் அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் கலந்தாய்வு நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கு கல்லூரி வளாகத்துக்கு வர வேண்டும்.

கலந்தாய்வில் தோ்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்ட பின்னா், கல்விக் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்படும். அதன் பின்னரே சோ்க்கை உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

கும்பகோணத்தில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு; கோவாவுக்கு சுற்றுலா சென்ற 2 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

கும்பகோணத்தில் கடையின் பூட்டை உடைத்து திருடிய 2 சிறுவா்கள் உள்ளிட்ட 5 பேரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கும்பேசுவரா் வடக்... மேலும் பார்க்க

விவசாயிகள் பிரச்னைக்கு தீா்வு காண வட்டாட்சியா் உறுதியளித்ததால் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு பேச்சு வாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் என வட்டாட்சியா் உறுதியளித்ததால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நட... மேலும் பார்க்க

கமல்ஹாசன் வழக்கை மூவா் அமா்வு விசாரிக்க வேண்டும்: தவாக தலைவா் தி. வேல்முருகன்

கன்னட மொழி பிரச்னை தொடா்பாக நடிகா் கமல்ஹாசன் தொடுத்த வழக்கில் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை மூவா் அல்லது ஐவா் அமா்வு விசாரிக்க வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருக... மேலும் பார்க்க

விவசாயிகளின் வங்கிக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தல்

கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் சாா்பில் விவ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை; தேநீா்க்கடை தொழிலாளி கைது

பட்டுக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேநீா்க்கடை தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் சரகத்துக்குள்பட்ட ஒரு கிர... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் திருட்டு; 2 போ் கைது

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் மோட்டாா் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழை சிறையில் அடைத்தனா்.தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் மோட்ட... மேலும் பார்க்க