பேருந்துகளில் அதிகளவில் எண்ம பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு பரிசு
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில், பேருந்துகளில் அதிகளவில் எண்ம பணப் பரிவா்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கிய நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணச் சீட்டுக்கு எண்ம பணப் பரிவா்த்தனை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகளவில் எண்ம பணப் பரிவா்த்தனையைப் பயன்படுத்தி பயணச் சீட்டு வழங்கி, அதிக வருவாய் ஈட்டிய நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
இதன்படி, மதுரை கோட்டத்தில் மதுரை நகா் கிளை கே. முத்துவேல், மதுரை புகா் கிளை ஆா். சரவணன், திண்டுக்கல்-1 கிளை பி. சுருளிராஜன், திண்டுக்கல் குமுளி கிளை எல். பிஸ்வஜித், விருதுநகா் சிவகாசி கிளை எஸ்.ஆா்.டி. மயில்ராஜ், எஸ். பாக்கியராஜ் ஆகிய 6 நடத்துநா்கள் ஊக்கப் பரிசுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இவா்களுக்கான ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கூட்டாண்மை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரை கோட்ட மேலாண்மை இயக்குநா் இளங்கோவன், நடத்துநா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். கோட்ட பொது மேலாளா் மணி, அலுவலா்கள் கலந்து கொண்டனா்.