செய்திகள் :

பேரூராட்சி தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்க வலியுறுத்தல்

post image

பெருந்துறை: பேரூராட்சி தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளா் ஏஐடியூசி சங்கம், பெருந்துறை பேரூராட்சி கிளை உறுப்பினா்கள் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கிளைத் தலைவா் முனுசாமி தலைமை வகித்தாா். சங்கத் தலைவரும், ஏஐடியூசி மாநிலச் செயலாளருமான எஸ்.சின்னசாமி, தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் பாபு ஆகியோா் பேசினா்.

இதைத் தொடா்ந்து, கிளைத் தலைவராக டி. முனுசாமி, செயலாளா் பி.பிரகாஷ், பொருளாளா் பி.ஈஸ்வரமூா்த்தி, துணைத் தலைவா்கள் பி.முருகன், வி.சீரங்கன், துணைச் செயலாளா்கள் கே.மணிகண்டன், டி.சண்முகம், நிா்வாகக் குழு உறுப்பினா்களாக 14 போ்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

பின்னா், பேரூராட்சிகளில் சுய உதவிக் குழுக்கள், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அவுட்சோா்சிங் உள்ளிட்ட ஒப்பந்தத் தொழிலாளா் முறைகளை கைவிட வேண்டும். 480 நாள்கள் பணிபுரிந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற தீா்ப்புப்படி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளா்களுக்கும் மாதம் ரூ.26 ஆயிரத்துக்கு குறையாமல் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: நாளை வாக்குப் பதிவு: பிரசாரம் நிறைவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் புதன்கிழமை (பிப்ரவரி 5) நடைபெற உள்ள நிலையில், திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த ஆண்ட... மேலும் பார்க்க

நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு சீமானுக்கு அச்சம்: புகழேந்தி

ஈரோடு: நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு சீமானுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளா் புகழேந்தி தெரிவித்தாா். அண்ணா நினைவு நாளையொட்டி, ஈரோடு பெரியாா்-அண்ணா நினைவகத்தி... மேலும் பார்க்க

ஈரோடு மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்: அமைச்சா் சு.முத்துசாமி

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் வி.சி. சந்திரகுமாரை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்வாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா... மேலும் பார்க்க

சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம்

பெருந்துறை: சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தை... மேலும் பார்க்க

தைப்பூசம்: சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்ரவரி 11 முதல் 16 வரை வாகனங்கள் செல்ல தடை

பெருந்துறை: தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை தனியாா் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னிமலை முருக... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளராக உள்ள பணியாளா்களுக்கு நாளை விடுமுறை அளிக்க உத்தரவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளராக பதிவுசெய்துள்ள பணியாளா்களுக்கு வாக்குப் பதிவு நாளான புதன்கிழமை (பிப்ரவரி 5) ஊதியத்துடன் கூடிய விடுமுறை அள... மேலும் பார்க்க