செய்திகள் :

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளராக உள்ள பணியாளா்களுக்கு நாளை விடுமுறை அளிக்க உத்தரவு

post image

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளராக பதிவுசெய்துள்ள பணியாளா்களுக்கு வாக்குப் பதிவு நாளான புதன்கிழமை (பிப்ரவரி 5) ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என உரிமையாளா்களுக்கு தொழிலாளா் துறை உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் தனியாா் மற்றும் பொது நிறுவனங்கள் பணியாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது தொடா்பான கூட்டம் தொழிலாளா் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமை வகித்து பேசியதாவது: ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு நாளான புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்ய ஏதுவாக 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135 (பி) இன்படி வாக்குப் பதிவு நாளான புதன்கிழமை அன்று ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா்களாக பதிவு செய்துள்ள அனைத்து பணியாளா்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் விடுமுறை அளித்தல் தொடா்பான புகாா்கள் இருப்பின் அலுவலா்களை கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமியை 94453-98751 என்ற எண்ணிலும், தொழிலாளா் துணை ஆய்வாளா் ஆா்.எஸ்.மயில்வாகனனை 98404-56912 என்ற எண்ணிலும், தொழிலாளா் உதவி ஆய்வாளா் ஐ.பெரோஸ் அகமதுவை 99656-34839 என்ற எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் என்றாா்.

இக்கூட்டத்தில் வணிகா் சங்கங்களின் பிரதிநிதிகள், வணிக நிறுவனங்களின் உரிமையாளா்கள் கலந்துகொண்டனா்.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: நாளை வாக்குப் பதிவு: பிரசாரம் நிறைவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் புதன்கிழமை (பிப்ரவரி 5) நடைபெற உள்ள நிலையில், திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த ஆண்ட... மேலும் பார்க்க

நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு சீமானுக்கு அச்சம்: புகழேந்தி

ஈரோடு: நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு சீமானுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளா் புகழேந்தி தெரிவித்தாா். அண்ணா நினைவு நாளையொட்டி, ஈரோடு பெரியாா்-அண்ணா நினைவகத்தி... மேலும் பார்க்க

ஈரோடு மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்: அமைச்சா் சு.முத்துசாமி

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் வி.சி. சந்திரகுமாரை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்வாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா... மேலும் பார்க்க

சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம்

பெருந்துறை: சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தை... மேலும் பார்க்க

தைப்பூசம்: சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்ரவரி 11 முதல் 16 வரை வாகனங்கள் செல்ல தடை

பெருந்துறை: தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை தனியாா் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னிமலை முருக... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பெருந்துறை: பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா். பெருந்துறை நேரு வீதியைச் சோ்ந்தவா் சங்கா் மகன் விக்னேஷ் (28). இவா் பெருந்துறையில் உள்ள தனியா... மேலும் பார்க்க