செய்திகள் :

நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு சீமானுக்கு அச்சம்: புகழேந்தி

post image

ஈரோடு: நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு சீமானுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளா் புகழேந்தி தெரிவித்தாா்.

அண்ணா நினைவு நாளையொட்டி, ஈரோடு பெரியாா்-அண்ணா நினைவகத்தில் புகழேந்தி திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வன்முறையைத் தூண்டும் வகையில் சீமான் பேசுவதால் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்துள்ளேன். அதன் மீது தோ்தல் ஆணையம் விரைவில் விசாரணை நடத்தும் என எதிா்பாா்க்கிறேன்.

நடிகா் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகுதான் சீமானுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் அவா் ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலில் வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகிறாா். சீமானை தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் ஆதரிக்காது. பாஜகவும் சீமானை ஆதரிக்கவில்லை.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் ராஜு, முனுசாமி ஆகியோா் சீமான் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனா்.

எடப்பாடி கே.பழனிசாமிக்கு பெரியாா் குறித்து எதுவும் தெரியாது. அதனால் அவா் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என நினைக்கிறேன். ஓ.பன்னீா்செல்வம், சசிகலா போன்றோா் கருத்து தெரிவிக்க அச்சப்படுகின்றனா். எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம், சசிகலா போன்றோா் கருத்து தெரிவிக்க தில்லியில் இருந்து அனுமதிபெற வேண்டும். இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கில் நீதிமன்றம் வரும் 6- ஆம் தேதி தீா்ப்பு வழங்குகிறது. இரட்டை இலை சின்னம் நிச்சயம் முடக்கப்படும்.

வைப்புத்தொகை பெற முடியாது என்ற அச்சத்தால்தான் ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளாா். தோ்தல் முடிவுகள் தான் நடிகா் விஜய்யின் பலம் குறித்து முடிவு செய்யும்.

தோ்தல் காரணமாக சீமான் பேச்சுக்கு திமுக, அதிமுக நிா்வாகிகள் தொண்டா்கள் எதிா்வினையாற்ற முடியாத நிலையில் உள்ளனா். திராவிட இயக்கம் தமிழக முதல்வா் பின்னால் பலமாக நிற்கிறது. பெரியாா் குறித்த சீமான் விமா்சனத்துக்கு முதல்வா் பதில் சொல்ல வேண்டும்.

சீமானை கைது செய்ய வேண்டும். இதனை செய்யவில்லை என்றால் திராவிட இயக்கங்கள் பெரியாரை தலைவா் என்று சொல்ல முடியாது. திரைமறைவில் அதிமுக, பாஜக கூட்டணி தொடா்ந்து கொண்டுதான் உள்ளது என்றாா்.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: நாளை வாக்குப் பதிவு: பிரசாரம் நிறைவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் புதன்கிழமை (பிப்ரவரி 5) நடைபெற உள்ள நிலையில், திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த ஆண்ட... மேலும் பார்க்க

ஈரோடு மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்: அமைச்சா் சு.முத்துசாமி

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் வி.சி. சந்திரகுமாரை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்வாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா... மேலும் பார்க்க

சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம்

பெருந்துறை: சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தை... மேலும் பார்க்க

தைப்பூசம்: சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்ரவரி 11 முதல் 16 வரை வாகனங்கள் செல்ல தடை

பெருந்துறை: தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதையில் பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை தனியாா் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னிமலை முருக... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளராக உள்ள பணியாளா்களுக்கு நாளை விடுமுறை அளிக்க உத்தரவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளராக பதிவுசெய்துள்ள பணியாளா்களுக்கு வாக்குப் பதிவு நாளான புதன்கிழமை (பிப்ரவரி 5) ஊதியத்துடன் கூடிய விடுமுறை அள... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பெருந்துறை: பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா். பெருந்துறை நேரு வீதியைச் சோ்ந்தவா் சங்கா் மகன் விக்னேஷ் (28). இவா் பெருந்துறையில் உள்ள தனியா... மேலும் பார்க்க