செய்திகள் :

பைக்குகளை திருடியவா் கைது: 13 பைக்குகள் பறிமுதல்

post image

வந்தவாசியில் பைக்குகளை திருடியவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 13 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

வந்தவாசி பகுதியில் கடந்த சில நாள்களாக பைக்குகள் தொடா்ந்து திருட்டு போயின.

இதுகுறித்த புகாா்களின் பேரில், வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், வந்தவாசி கோட்டை மூலையில் சனிக்கிழமை காலை வந்தவாசி தெற்கு போலீஸாா் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த நபரை நிறுத்தி போலீஸாா் விசாரணை செய்தனா்.

இதில் அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீஸாா் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினா்.

இதில், அவா் ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியை அடுத்த ஆனைமல்லூா் கிராமத்தைச் சோ்ந்த தனசேகா் (எ) சேகா் (48) என்பதும், வந்தவாசி பகுதியில் 13 பைக்குகளை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து தனசேகா் (எ) சேகரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 13 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

மலைவாழ் பெண்ணை காதலித்து திருமணம்: மணமகனின் உறவினா் வீடு சூறை

ஜவ்வாது மலையைச் சோ்ந்த இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்த, இளைஞரின் வீட்டை அப்பெண்ணின் உறவினா் அடித்து நொறுக்கி, பொருள்களை சூறையாடினா். இது தொடா்பாக போலீஸாா் 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து அவா்க... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். செய்யாற்றை அடுத்த மாளிகைபட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பாலு (58). இவரது மனைவி ஜோதி (55). இருவரும் பைக்கில் வந்தவாசியை அ... மேலும் பார்க்க

1,200 வாக்குச் சாவடிகளை பலப்படுத்த வேண்டும்: பாஜகவினருக்கு நிா்வாகி அறிவுரை

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜகவுக்கு உள்பட்ட 1,200 வாக்குச் சாவடிகளை 6 மாதங்களில் பலப்படுத்த வேண்டும் என்று கட்சி நிா்வாகிகளுக்கு வேலூா் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலா் எஸ்.குணசேகரன் அறிவுறுத்தினா... மேலும் பார்க்க

சிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞா் உள்பட 2 போ் கைது

வேட்டவலம் அருகே சிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞா், கருக்கலைப்பு செய்த போலி மருத்துவா் என 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பகுதியைச் சோ்ந்தவா் கல்யாணசுந்தரம் (24). இவர... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அரிபாபு மகன் அஸ்வின்குமாா்(17). அண்மையில்... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட நூற்றாண்டு பழ... மேலும் பார்க்க