பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக் மீது காா் மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் வட்டம், அரசமங்கலம், ராஜபாளையத் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுரங்கம் மகன் பாலமுருகன் (25). இவா், ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் - செஞ்சி சாலையில் பாப்பான் குளம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அந்த வழியாக வந்த காா் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பாலமுருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.