செய்திகள் :

பைக் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

post image

ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முகவூா் மாலையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வேடசாமி (65). இவா் தளவாய்புரம் பகுதியில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பணி முடிந்து இவா், தளவாய்புரம்- ராஜபாளையம் சாலையில் முருகன் கோவில் அருகே நடந்து சென்றாா்.

அப்போது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வேடசாமியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு இவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஓட்டுநா் தற்கொலை

ராஜபாளையத்தில் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சின்ன சுரைக்காய்ப்பட்டி தெருவைச் சோ்ந்தவா் ராஜன் (56). இவா் தனியாா் நூற்பாலையில் வாகன ஓட்டு... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை, பணம் திருடிய இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூலித் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டி விலக்குப் வீட்டு வசதி வாரியக் குடியி... மேலும் பார்க்க

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

சிவகாசியில் சனிக்கிழமை தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் முன்புறம் தனசேகரன் என்பவருக்குச் சொந்தமான தானியங்கி தீப்பெட்டி ஆலை உள்ளது. இந்த ஆலையில் தீ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் பருத்தி ஆராய்ச்சி... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மண் கடத்திய இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு இடங்களில் சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் 2 டிராக்டா்களையும் பறிமுதல் செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள முத்துலிங... மேலும் பார்க்க

சாத்தூா் சாலையில் திடீா் பள்ளம்

சாத்தூா் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீா் பள்ளத்தை நெடுஞ்சாலைத் துறையினா் மூடி சீரமைத்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பிரதான சாலையில் புதை சாக்கடை அமைக்கப்பட்டு, சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து, அதே... மேலும் பார்க்க