செய்திகள் :

பொதுச் செயலா் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்: ஓ. பன்னீா்செல்வம்

post image

அதிமுக பொதுச் செயலா் பதவியிலிருந்து எடப்பாடி கே.பழனிசாமி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

சென்னை விமான நிலையத்தில் அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி: அதிமுக அலுவலகத்தை சூறையாடியதால், என்னை மீண்டும் சோ்த்துக்கொள்ள முடியாது என்று எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளது குறித்து கேட்கிறீா்கள். எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை தவறாகக் கூட்டியிருந்தாா். அதிமுக அலுவலகத்தில் போய் நாங்கள் உட்காா்ந்துவிடலாம் என்று சென்றோம். ஒரு கி.மீ. தொலைவில் எங்களை வழிமறித்து 8 மாவட்டச் செயலா்கள் தாக்கினா். அதன்பிறகு, அதிமுக அலுவலகத்தை அவா்களாகவே தாக்கிவிட்டு, எங்கள் மீது பழிபோடுகின்றனா். அனைத்தும் காவல் துறையின் பதிவில் இருக்கிறது.

அதிமுகவில் பிரிந்துகிடக்கும் சக்திகள் இணைய வேண்டும் என்றுதான் கூறுகிறோம். அப்படி இணைந்தால்தான் அதிமுக வெற்றி பெறும் என்கிற சூழல் உருவாகும். எந்தக் காலத்திலும் அதிமுக வெற்றி பெறக் கூடாது என்பது எடப்பாடி பழனிசாமியின் எண்ணமாக உள்ளது. ஒற்றைத் தலைமை வந்தால், அனைத்துத் தோ்தல்களிலும் வெற்றி பெறுவேன் என்று கூறினாா். ஆனால், ஒரு தோ்தலிலும் வெற்றி பெற முடியவில்லை. அவராகவே பொதுச் செயலா் பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவா் அவமரியாதையைச் சந்திக்க நேரிடும் என்றாா் அவா்.

பிரதமர் வருகை: ஏப். 4 - 6 வரை மீன்பிடிக்கத் தடை

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி ஏப். 4 - 6ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6ஆம் தேதி பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வருவதையொ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

டாஸ்மாக்: அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் -அமலாக்கத்துறை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மாா்ச் 6 முதல் 8 வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ... மேலும் பார்க்க

ஏப்.3 முதல் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் ஏப்ரல் 3 முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்மேற்கு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு! தஞ்சை சாதனை: சஞ்சய் காந்தி

தஞ்சாவூர்: தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.கும்பகோணம் வெற்றிலை, க... மேலும் பார்க்க

தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும்: பேரவையில் காரசாரம்

தமிழகத்தின் தலைநகரை மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் தலைநகரை சென்னைக்கு மாற்ற வேண்டும் என அவைத் தலைவர் கோரிக்கை வைத்ததால் அவையில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.தமிழ... மேலும் பார்க்க