செய்திகள் :

பொதுத் தோ்வு தோ்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

post image

தமிழகத்தில் பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோ்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் பள்ளிகள், ஆசிரியா்கள் விவரங்களை வழங்க கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழகத்தில் 3,088 உயா்நிலைப் பள்ளிகள், 3,174 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தோ்வுகளில் 100 சதவீத தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஏப்.25-ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.

அதைச் செயல்படுத்தும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பொது தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் 100 சதவீத தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், அதன் ஆசிரியா்களின் விவரங்களைச் சேகரிக்க வேண்டும்.

அவற்றை தொகுத்து அறிக்கையை 10 நாள்களுக்குள் இயக்குநரகத்துக்கு சமா்ப்பிக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படாதவாறு விரைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விராலிமலை வாரச்சந்தை: ஒன்றரை கோடி தாண்டி ஆடு வர்த்தகம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் திங்கள்கிழமை காலை கூடிய ஆட்டுச் சந்தை களைகட்டியது. விற்பனைக்கு கொண்டு வந்த ஆடுகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.சித்திரை மாதத்தில் தா... மேலும் பார்க்க

கூடலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள நெலாக்கோட்டை பஜாரில் திங்கள்கிழமை அதிகாலை காட்டு யானை ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. வழக்கமாக எந்த நேரத்திலும் பஜாரில் நடமாடும் காட்டு யானை சாலையோரம் நிறுத்தியிருந்... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இதனால் பலருக்கு தங்கம் எட்டா பொருளாகி வருகிறது. அதன்படி சென்னையில் திங்கள... மேலும் பார்க்க

கோவை: மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரள மருத்துவர் பலி

மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் மூச்சுத்திணறி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் கேரள மருத்துவர் அஜ்சல் சைன்(26),... மேலும் பார்க்க

சென்னையில் ரூ.20 கோடி மதிப்பிலான வைரம் திருட்டு- 4 பேர் கைது

சென்னையில் ரூ.20 கோடி மதிப்பிலான வைரத்தை திருடிய விவகாரத்தில் 4 பேர் கொண்ட கும்பல் தூத்துக்குடி அருகே கைது செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே சுங்கச்சாவடியை கடக்க ... மேலும் பார்க்க

தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம்: அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ, முன்னாள் எம்பி கைது

தடையை மீறி ஆலை நுழைவாயில் போராட்டம் நடத்த முயன்ற அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ சு ரவி, முன்னாள் எம்பி கோ. அரி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.அரக்கோணம் அருகே இச்சிப்புத்தூரில் உள்ளது எம்ஆர்எப் தொழிற்சாலை... மேலும் பார்க்க