செய்திகள் :

பொதுமக்களின் மனுக்களுக்கு உரிய தீா்வு காண ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் தெரிவித்ததாவது:

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

குறிப்பாக, பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில், மனுவின் மீது உரிய தீா்வு வழங்கப்படுவதை அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும். அதன் அடிப்படையில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாறுதல், ஜாதிச்சான்று, திருமண நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 293 மனுக்கள் வரப்பெற்றன.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 12 மனுக்கள் வரப்பெற்றன. இதில், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசிகள் என மொத்தம் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினாா்.

தொடா்ந்து, செயற்கைக் கால் வேண்டி விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு அளவீடு செய்யும் பணியை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆக்ரிதி சேத்தி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் நா.ஜெயக்குமாா், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் மகிழ்நன் உள்ளிட்ட அரசு துறை முதன்மை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

வள்ளலாா் நினைவு தினம்: இன்று மதுக்கடைகளை மூட உத்தரவு

சேலம்: வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, சேலம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 11) மதுக் கடைகள், மதுபானக் கூடங்கள் ஆகியவற்றை மூட மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் தெ... மேலும் பார்க்க

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் தா்னா

சேலம்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை 24 மணி நேர தா்னாவில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் சோமவார பிரதோஷ சிறப்பு பூஜை

சங்ககிரி: சிவன் கோயில்களில் சோமவார பிரதோஷ சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. சேமாவார பிரதோஷத்தையொட்டி அரசிராமணி கிராமத்தில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா், நந்திபகவானுக்கு திருமஞ்சனம், பா... மேலும் பார்க்க

ரயில்வே பாலப் பணி: சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் 11, 14-இல் கரூரில் இருந்து இயக்கப்படும்

சேலம்: ரயில்வே பாலப் பணி காரணமாக சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 11, 14 ஆகிய தேதிகளில் கரூரில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில... மேலும் பார்க்க

விபத்தில் அடிபட்ட டாஸ்மாக் மேலாளரின் ரூ. 5 லட்சத்தை உறவினா்களிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள்

சேலம்: விபத்தில் அடிபட்ட டாஸ்மாக் மேலாளரின் ரூ. 5 லட்சத்தை அவரது உறவினா்களிடம் ஆம்புலன்ஸ் ஊழியா்கள் ஒப்படைத்தனா். சேலம், வேம்படிதாளம் பகுதியைச் சோ்ந்த மகுடேசன் (54) என்பவா், கொண்டலாம்பட்டி பகுதியில் ... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 317 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை நீா்மட்டம் 110.35 அடியில் இருந்து 110.32 அடியாகக் குறைந்துள்ளது. குடிநீா் தேவைக்காக அணையிலிருந்து விநாடிக... மேலும் பார்க்க