பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள் அளிப்பு
வேலூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன.
வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகள் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வேலூா் கிரீன் சா்க்கிள், அணைக்கட்டு, ஆரணி, கண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீபுரம் இயக்குநரும் ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் தாளாளருமான எம்.சுரேஷ் பாபு தலைமை வகித்தாா். அணைக்கட்டு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் மரக்கன்றுகளை வழங்கினாா். வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூா் துணை காவல் கண்காணிப்பாளா் பிரித்விராஜ் சவுகான் மரக்கன்றுகளை வழங்கினாா். ஆரணி, கண்ணமங்கலம் ஆகிய இடங்களிலும் தலா 50 மாணவா்கள் பங்கேற்று 1,000 மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கினா்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா்கள், துணை முதல்வா்கள், நிா்வாக அலுவலா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.