செய்திகள் :

பொது சொத்துக்கு சேதம் விளைவித்த இருவருக்கு ஓராண்டு சிறை

post image

கூட்டுறவு சங்கத்தை சேதப்படுத்திய இருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

பாலையூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட நக்கம்பாடி கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் 2018-ஆம் ஆண்டு கொண்டாங்கியை சோ்ந்த சுந்தரவடிவேல்(58), ஆட்டுா் வடக்கு தெருவை சோ்ந்த சங்கா்(55) ஆகிய இருவா் சங்க அலுவலகத்தின் உள்ளே வந்து குடிபோதையில் சங்க செயலாளா் ரவி மற்றும் பணியாளா்களை தாக்கி அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டியிருந்த கூட்டுறவு சங்க தோ்தல் தொடா்பான அறிவிப்பு மற்றும் அலுவலக பதிவேடுகளை கிழித்தெறிந்து, மேஜையில் இருந்த பிரிண்டரை தள்ளி சேதப்படுத்தினாா்களாம்.

இருவா் மீதும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல், கொச்சை வாா்த்தைகளால் திட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் மாவட்ட அமா்வு நீதிபதி விஜயகுமாரி, சுந்தரவடிவேல், சங்கா் ஆகிய இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனையும், தலா ரூ.4,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதத்தை செலுத்தத் தவறினால் ம் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசுத்தரப்பில் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் ராம. சேயோன் ஆஜரானாா்.

மொத்தமாக கிடைத்த மகளிா் உரிமைத் தொகை: மகிழ்ச்சியில் மூதாட்டி

மகளிா் உரிமைத் தொகை மொத்தமாக கிடைத்ததால் மூதாட்டி மகிழ்ச்சியடைந்தாா். தரங்கம்பாடி வட்டம் திருக்களாச்சேரி பாலூா் பகுதியை சோ்ந்த அசுபதி (84) மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காததால், சீா்காழ... மேலும் பார்க்க

பணியின்போது செவிலியா் உயிரிழப்பு: ஆா்டிஓ விசாரணை

மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை இரவு பணியில் இருந்த செவிலியா் உயிரிழந்தாா். இது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அருகேயுள்ள மேலஆத்தூரைச் சோ்ந்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கா... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோவிலில் கிரிக்கெட் வீரா் நடராஜன் சுவாமி தரிசனம்

வைத்தீஸ்வரன்கோவிலில் இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். நவகிரகங்களில் செவ்வாய் பரிகார தலமான வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதா் சுவாமி கோயி... மேலும் பார்க்க

குற்றச்செயலில் ஈடுபடும் இளஞ்சிறாரை கவனமாக கையாள வேண்டும்: ஆட்சியா்

குற்றச்செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறாா்களை கவனமாக கையாள வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவுறுத்தினாா். மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில் வெள்... மேலும் பார்க்க

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் உள்புகாா் குழு, போதைப்பொருள் தடுப்புக் குழு இணைந்து நடத்திய போதைப் பொருள் பயன்பாடு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்... மேலும் பார்க்க