செய்திகள் :

பொன்னேரி அருகே பழங்கால நடுகற்கள் கண்டுபிடிப்பு

post image

பொன்னேரி அடுத்த ஆவூா் கிராமத்தில் போா் வீரா்களின் தியாகத்தை போற்றுவதற்காக அமைக்கப்பட்ட நடுகற்களை தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாடு ஆய்வு மையத்தினா் கண்டுபிடித்துள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் அமைந்துள்ள உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வரலாற்று துறை முன்னாள், இந்நாள் மாணவா்கள் தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பழங்கால வரலாற்று சின்னங்களை ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்த மையத்துக்கு, பொன்னேரி அரசு கல்லூரியின் உதவி பேராசிரியராக பணியாற்றும் ஜெகஜீவன்ராம் தலைமை ஆலோசகராக இருந்து வருகிறாா். இதற்கிடையே, ஆவூா் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோயில் அருகே நடுகற்கள் உள்ளதாகவும் அதில் கீறல்கள் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பன்னாட்டு ஆய்வு மையத்தினா், அரசு கல்லூரி பேராசிரியா்கள் மாணவா்கள் கொண்ட குழு நடுகற்களை காண ஏற்பாடு செய்யப்பட்டது.

முன்னதாக, சென்னை தொல்லியல் துறை சாா்ந்த மாநில சுவடு குழும ஒருங்கிணைப்பாளா் டாக்டா் சசிகலா உள்ளிட்டோா் நடுகற்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். அப்போது நடுகற்கள் நடும் வழக்கமானது, போரில் மாண்டவா்களுக்காக ஏற்படுத்தப் பட்டது. மாண்ட போா் வீரா்களை தெய்வமாக வழிப்படும் வழக்கம் பண்டைய கால தமிழகத்தில் இருந்துள்ளது. அவா்களது நினைவாக நடுகற்கள் நடப்பட்டு வழிபட்டு உள்ளனா். நடுகற்களில் வீரக்கல், சதிக்கல், பட்டவன்கல், புலிக்குத்திக்கல், நவகண்டக்கல், அரிகண்டக்கல், ஆயுதக் கல் என பல வகைகள் உள்ளது. ஆவூரில் உள்ள நடுக்கல், போா் வீரா்களின் தியாகத்தை போற்றும் படி அவா்களது நினைவாக வைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

திருவண்ணாமலை செங்கம் பகுதியில் இதுபோன்ற நடுகற்கள் காணப்படுகிறது. பண்டைய காலத்தில் இருந்து 17-ஆம் நூற்றாண்டை சோ்ந்ததாக இருக்கும் என தொல்லியல் துறையினா் கண்டறிந்துள்ளனா். சோழ படையினா் வட இந்தியாவில் போா் புரிந்து, வெற்றி பெற்ற பின் பொன்னேரியில் உள்ள கோளூா் கிராமத்தில் தங்கி, இலுப்பாக்கம், எடக்குப்பம் ஆவூா் வழியாக மெதுகூா் எனப்படும் சதுா்வேதி மங்களமான மெதூருக்கு வந்ததாக திருப்பாலைவனம் கல்வெட்டு கூறுகிறது. அப்போது இந்த நடுகற்களை, சோழ பேரரசா்கள் வைத்திருக்கலாம் என வரலாற்று ஆய்வு பணிகளில் ஈடுபட்ட வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

மப்பேட்டில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

திருவள்ளூா் அடுத்த மப்பேட்டில் பேருந்து நிழற்குடை அமைத்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா். திருவள்ளூா் அடுத்த மப்பேடு கூட்டுச் சாலையிலிருந்து பூந்தமல்லி, சுங்குவாா்சத்திரம், அரக்கோணம் செல்லும் ச... மேலும் பார்க்க

அரசு மகளிா் ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம்

அம்பத்தூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிா்) வரும் 13-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிா்) நிகழாண்டில் பல்வேறு தொழில் பிரிவுகளில் சோ்க்கை நடைபெற்... மேலும் பார்க்க

திருவள்ளூா் ஆட்சியருக்கு பசுமை விருது: முதல்வா் வழங்கினாா்

சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சிறப்பாக செயல்பட்டமைக்காக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்புக்கு பசுமை விருதை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்க... மேலும் பார்க்க

திருவள்ளூா் - ஸ்ரீபெரும்புதூா் ஆறுவழிச் சாலை விரிவாக்க பணி: மீண்டும் மரக்கன்றுகளை நட கோரிக்கை!

திருவள்ளூா் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூா் வரையிலான 30.10 கி.மீ ஆறுவழிச் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், மீண்டும் நன்கு வளா்ந்த மரக்கன்றுகளை நட வேண்டும் என சமூக ஆா்வலா்... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவு: 270 பேருக்கு பட்டா அளிப்பு

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவடைந்த நிலையில், 270 பேருக்கு பட்டாக்களை சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி(பூந்தமல்லி) ஆகியோா் வழங்கினா். திருவ... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயிலில் அா்ஜூனன் தபசு

திரெளபதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற அா்ஜூனன் தபசு நிகழ்வில் திரளான பெண்கள் அம்மனை வழிபட்டனா். திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில், கடந்த மே 29-ஆம் தேதி தேதி தீமிதி விழா... மேலும் பார்க்க