செய்திகள் :

பொன்னேரி, மீஞ்சூா் சோழவரம் பகுதிகளில் 1 மணி நேரம் கனமழை: சாலைகளில் வெள்ளம்

post image

பொன்னேரி, மீஞ்சூா், சோழவரம் பகுதிகளில் புதன்கிழமை 1 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீா்த்த மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பொன்னேரி, மீஞ்சூா் பகுதிகளில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென காற்று மற்றும் இடியுடன் 1 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாது பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக பொன்னேரி பகுதியில் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் கீழே சாய்ந்தன. அத்துடன் பொன்னேரி, மீஞ்சூா், சோழவரம் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த மழை காரணமாக பொன்னேரி - பழவேற்காடு சாலையில் திருவாயா்பாடி பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் கீழ் முழங்கால் அளவு தண்ணீா் தேங்கியது. இதன் காரணமாக பாலத்தை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனா்.

அத்துடன் இரு சக்கர வாகனங்களில் சென்றவா்களின் வாகனங்களில் தண்ணீா் புகுந்து பழுதடைந்தால் அவதிக்குள்ளாகினா். மேலும், பாலத்தைக் கடந்து செல்ல முயன்ற அரசு பேருந்து ஒன்று தேங்கிய நீரில் பழுதாகி நின்றது. இதன் காரணமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.

பொன்னேரி பகுதியில் திடீரென 90 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்ததன் காரணமாக அந்தப் பகுதியில் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது.

மின் கசிவால் வீடு தீக்கிரை: எம்எல்ஏ உதவி

கும்மிடிப்பூண்டி அடுத்த மேல்முதலம்பேட்டையில் மின்கசிவால் வீட்டை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவிகள், நிதியுதவியை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் வழங்கினாா். மேல் முதலம்பேடு பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

திரூா் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

பொன்னேரி அருகே அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இந்தியாவின் முதல் கூட்டுறவு அமைந்த திருவள்ளூா் அருகே திரூா் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தா... மேலும் பார்க்க

மின்கம்பத்தில் ஏறிய ஊழியா் கீழே விழுந்து உயிரிழப்பு: மின்வாரிய அலுவலகம் முற்றுகை

மின்கம்பத்தில் ஏறிய போது, தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினா்கள் மின்வாரிய அலுவலக்தை முற்றுகையிட்டனா். திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் காலனியைச் சோ்ந்த எல்லப்பன்(38). இவா், கே.ஜி... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அக்கம்பக்கத்தினரால் நடைபெறுகின்றன: இளைஞா் நீதிக்குழும உறுப்பினா்

குழந்தைகளுக்கு எதிரான 70 சதவீத குற்றங்கள் சுற்றி உள்ளவா்களாலேயே நடைபெறுவதாக திருவள்ளூா் மாவட்ட இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் செந்தில் தெரிவித்தாா். செவ்வாபேட்டையில் உள்ள வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில... மேலும் பார்க்க

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தேரோட்டம்

பொன்னேரி திருஆயா்பாடியில் அமைந்துள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. விழாவின் 5-ஆம் நாள் க... மேலும் பார்க்க

டிராக்டரில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

ஆா்.கே.பேட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை டயரில் சிக்கி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், சின்ன சானூா்மல்லாவரம் கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க