செய்திகள் :

`பொம்மை தரேன்’ - 10 வயது சிறுமி, சிறார்வதை செய்யப்பட்டு 6வது மாடிலிருந்து தூக்கி வீசப்பட்ட கொடூரம்

post image

மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில் உள்ள 10 மாடி குடியிருப்பில் இரவு திடீரென மிகப்பெரிய சத்தம் கேட்டது. உடனே கட்டடத்தில் வசிப்பவர்கள் வெளியில் வந்து என்னவென்று டார்ச் லைட் அடித்து பார்த்தனர். இதில் 10 வயது சிறுமி அங்குள்ள பைப் அருகே இறந்து கிடந்தார். இது குறித்து உடனே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆரம்பத்தில் சிறுமி மேலிருந்து தவறி விழுந்திருக்க வேண்டும் என்று போலீஸார் கருதினர். ஆனால் சிறுமியின் கழுத்தில் மிகப்பெரிய காயம் இருந்தது. அதோடு சிறுமி போராடி இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் வகையிலும் காயம் இருந்தது. சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்து பார்த்ததில் கொலை செய்யப்படும் முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கொலையாளி யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் அனில் ஷிண்டே கூறுகையில், ''சிறுமி வீட்டிற்கு வெளியில் வேறு இரண்டு சிறுமிகளுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விகாஷ்(20) என்பவர் சிறுமிக்கு பொம்மை கொடுப்பதாக கூறி தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். தனது வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வெளியில் சத்தம் வராமல் இருக்க சிறுமியின் வாயை பொத்தியதில் சிறுமி மூச்சுத்திணறி இறந்துள்ளார். அப்படி இருந்தும் சிறுமி இறந்ததை உறுதிபடுத்த சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து சிறுமியின் கழுத்தில் குத்தி இருக்கிறார். பின்னர் வீட்டின் ஜன்னல் கதவை திறந்து சிறுமியின் உடலை வெளியில் 6வது மாடியில் இருந்து தூக்கி எறிந்துள்ளார்.

சிறுமியுடன் விளையாடிய இரு சிறுமிகள் முன்பு விஷாலை கொண்டு வந்தபோது அவர் தான் 10 வயது சிறுமியை அழைத்து சென்றார் என்று அடையாளம் காட்டினர். கைது செய்யப்பட்ட வாலிபர் வீட்டில் இருந்து ரத்தக்கரை படிந்த துணி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட வாலிபர் பீகார் மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்தவர். தற்போது வேலை இல்லாமல் இருந்தார்'' என்றார். இந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும் இந்த Lady Don யார்?

டெல்லி ஷீலம்பூர் பகுதியில் சமீபத்தில் குனால்(17) என்ற வாலிபர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். நேற்று முன் தினம் குனால் தனது வீட்டில் இருந்து பால் வாங்குவதற்காக வெளியில் கிளம்பிய போ... மேலும் பார்க்க

மணமேடையில் அதிர்ந்த மணமகன் - மணப்பெண் என காட்டப்பட்டவரின் தாயாரை திருமணம் செய்து வைக்க முயற்சியா?

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரம்புரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் மொகமத் அசிம்(22). அசிம் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் தனது பூர்வீக வீட்டில் தனது சகோதரர் நதீமுடன் வசித்து வந்தார். இவருக்கு அவ... மேலும் பார்க்க

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோ... மேலும் பார்க்க

பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகாரை ஒட்டிய பெரியவர்!

மதுரை பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாயழகன். இவரது பேத்தி ரம்யா கிருஷ்ணன், ரீபன் என்பவரைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வீட்டில் நடந்த வாக்கு... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி; அரசு ஊழியர் சிறைக்குச் சென்ற பின்னணி!

அரக்கோணத்தைச் சேர்ந்த விஜி என்பவர், தொலைதூர தொடர்பு கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இவரின் கல்வி மையத்துக்கு சென்னை திருநீர்மலை பகுதியில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் கிளாஸ் எடுக்க சென்றிருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; ஆன்லைன் நண்பரைச் சந்திக்கச் சென்ற மாணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனுக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் அமீன் எ... மேலும் பார்க்க