செய்திகள் :

பொருளாதாரத் துறையில் மோடி ஆட்சி தோல்வி: ராகுல் காந்தி குற்றஞ்சாட்டு

post image

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பொருளாதாரத் துறையில் தோல்வி, பணவீக்கம் மற்றும் பொய்கள்தான் பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மோடி ஆட்சியில் ஏதாவது பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது என்றால், அது பொருளாதாரத் துறையில் தோல்வி, பணவீக்கம் மற்றும் பொய்கள் மட்டும்தான்.

மத்திய அரசு நியாயமற்ற வரிகளை நீக்கி, ஏகாதிபத்தியத்தை அகற்றி, வங்கிகளின் கதவுகளைத் திறந்து, திறமையானவர்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும். அப்போதுதான் பொருளாதாரக் கட்டமைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் வலுவான இந்தியா உருவாகும் என்று ராகுல் காந்தி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பொருளாதாரத்தைக் கையாண்டு வரும் முறை குறித்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

விலைவாசி உயர்வு, தனியார் முதலீடுகள் குறைவது போன்றவை சாமானிய மக்களைப் பெரிதும் பாதித்து வருவதாக அக்கட்சி கூறுகிறது.

உ.பி.: மதமாற்றத்தில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப்பதிவு!

உ.பி.யில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஷ்ரவஸ்தி நகரிலுள்ள பக்வான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் சிங். கடந்த சில ஆண்டுகளாக பஞ்... மேலும் பார்க்க

ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதித்த பெற்றோர், சகோதரியைக் கொன்ற இளைஞர்!

ஒடிசாவின் ஜகத்சிங்பூரில் ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதித்த பெற்றோர், சகோதரியைக் கொன்ற இளைஞரால் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜகத்சிங்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜெயபாடா சேத்தி சா... மேலும் பார்க்க

பூனையின் இறப்பால் துக்கம் தாளாமல் பெண் தற்கொலை: உ.பி.யில் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேசத்தில் பூனையின் இறப்பால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூஜா(32). இவர் கடந்த எட்டு ஆண்டுகள... மேலும் பார்க்க

மாதவி புச் மீதான நடவடிக்கைக்கு 4 வாரம் தடை: மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை: பங்குச் சந்தை முறைகேடு மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவா் மாதவி புரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக நான்கு வாரங்களுக்கு நடவடிக்கை எடுக... மேலும் பார்க்க

டிஜிட்டல் இந்தியாவில் கையால் 100 பக்க பட்ஜெட்டை எழுதிய நிதியமைச்சர்! யார் அவர்?

ராய்ப்பூர்: டிஜிட்டல் ஆதிக்க சகாப்தத்தில், 100 பக்க பட்ஜெட்டை கையால் எழுதி தாக்கல் செய்துள்ளார் சத்தீஸ்கர் நிதியமைச்சரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஓ.பி. செளத்ரி.முழு பட்ஜெட்டையும் தானே கையால் எழுதி... மேலும் பார்க்க

17 வயது சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த ஆண் நண்பர்!

மும்பையில் 17 வயது சிறுமி அவரது ஆண் நண்பரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மும்பையின் அந்தேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அதே பகுதியைச்... மேலும் பார்க்க