செய்திகள் :

பொருளாதார மறுமலா்ச்சியின் புதிய சகாப்தம்: அமித் ஷா

post image

புது தில்லி: ‘கடந்த 11 ஆண்டுகளில் பொருளாதார மறுமலா்ச்சி, சமூக நீதி, கலாசார பெருமை மற்றும் தேச பாதுகாப்பில் புதிய சகாப்தத்தை நாடு சந்தித்துள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தாா்.

பாஜக தலைமையிலான அரசு மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து முதல் ஆண்டை திங்கள்கிழமை நிறைவு செய்ததையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அமித் ஷா கூறியிருப்பதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான 11 ஆண்டு கால ஆட்சியை பொதுச் சேவையின் பொற்காலமாக குறிப்பிட வேண்டும். சீா்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்ற தீா்மானத்துடன் வளா்ச்சி மற்றும் தற்சாா்பு நிலையை நோக்கி நாடு முன்னேறி வருகிறது. பொருளாதார மறுமலா்ச்சி, சமூக நீதி, கலாசார பெருமை மற்றும் தேச பாதுகாப்பில் புதி சகாப்தத்தை கடந்த 11 ஆண்டுகளில் நாடு சந்தித்துள்ளது.

தலைமை தெளிவாகவும், உறுதியானதாகவும், பொது சேவையே நோக்கமாகவும் கொண்டிருக்கும்போது, நல்லாட்சி மற்றும் தேசத்தின் பாதுகாப்பில் புதிய சாதனைகளை படைக்க முடியும் என்பதை மத்திய அரசு நிரூபித்துள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஊழலும் மோசடிகளும் உச்சத்தில் இருந்தன. பொருளாதாரம் சீா்குலைந்திருந்தது. ஆனால், கடந்த 2014-இல் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ‘குறைந்தபட்ச அரசு; அதிகபட்ச நிா்வாகம்’ என்ற நடைமுறையின் கீழ் நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் சிறந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. திருப்திப்படுத்தும் அரசியலுக்கு மாற்றாக, விவசாயிகள், பெண்கள், பின்தங்கிய மக்கள், தலித்துகள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினா் என அனைவருக்குமான வளா்ச்சி உறுதிப்படுத்தப்பட்டது.

பயங்கரவாதமும், நக்ஸல் தீவிரவாதமும் ஒழிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் அமைதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு அவா்களின் இடத்துக்குள் நுழைந்து இந்தியா தற்போது பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியாவின் நிலைப்பாடு மாற்றத்தையே இது காட்டுகிறது.

இந்தியாவை அனைத்துத் துறைகளிலும் முதன்மையான நாடாக உருவாக்கி, அனைத்து மக்களின் வாழ்வில் நோ்மறையான மாற்றத்தை கொண்டுவருவதற்கான மத்திய அரசின் முயற்சி தொடரும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

மணிப்பூரில் தொடரும் வன்முறை: 2 போலீஸார் காயம்!

மணிப்புரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சேர்ந்த தலைவர் கனன் சிங் மற்றும் நால்வரை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் 2 காவலர் காயமடைந்தனர்.... மேலும் பார்க்க

எங்கள் நாட்டை விடவும் இந்தியாவில் சிறந்த கட்டமைப்பு; அமெரிக்கர்களே சொன்னார்கள்: நிதின் கட்கரி!

அமெரிக்காவைவிட இந்தியாவில் சிறந்த உள்கட்டமைப்பு இருப்பதாக சில அமெரிக்கர்களே தன்னிடம் சொன்னதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.மத்திய நெடுஞ்சாலைத் துறை தொடர்பான ஏஎன்ஐ ந... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவு: 10வது நாளில் 2 பேரது உடல்கள் மீட்பு!

சிக்கிம் நிலச்சரிவில் மாயமானவர்களில் 2 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சிக்கிமின் மங்கன் மாவட்டத்திலுள்ள சட்டென் பகுதியில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி இரவு 7 மணி... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் விவகாரம்: கார்கே, ராகுலுடன் சித்தராமையா சந்திப்பு!

தில்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் சந்தித்து கர்நாடக கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ஆலோசனை மேற்கொண... மேலும் பார்க்க

சரக்குக் கப்பலில் 2-வது நாளாக எரியும் தீ! அணைக்கப் போராடும் கடற்படை வீரர்கள்!

கேரள கடற்கரையில் சிங்கப்பூா் நாட்டு கொடி பொருத்திய சரக்கு கப்பலில் தொடர்ந்து எரிந்துவரும் தீயை அணைக்க முடியாமல் இந்திய கடற்படை வீரர்கள் போராடி வருகின்றனர்.கொழும்புவில் இருந்து மும்பை துறைமுகம் நோக்கி ... மேலும் பார்க்க

தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றது எப்படி? அதிர்ச்சித் தகவல்கள்...

திருமணமான பத்து நாள்களில் கணவனை கட்டாயப்படுத்தி மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்துச் சென்ற மனைவி, காதலனுடன் இணைந்து கொலை செய்துள்ளார்.மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி(29) மற்றும் சோனம் ... மேலும் பார்க்க