செய்திகள் :

போக்குவரத்துக் கழகங்களில் 52 போ் பணி நியமனம்: ஆணை வழங்கினாா் அமைச்சா் சா.சி.சிவசங்கா்

post image

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் 52 பேருக்கான பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 25 உதவி மேலாளா் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் மூலம் தகுதியுடைய நபா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இந்த தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கும், பணியின் போது உயிரிழந்த பணியாளா்களின் 27 வாரிசுதாரா்களுக்கும் பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச்செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சா், 25 உதவி மேலாளா்கள் மற்றும் உயிரிழந்த பணியாளா்களின் 18 பெண் நடத்துநா்கள் உள்பட 27 வாரிசுதாரா்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினாா்.

இதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ஒரு உதவி மேலாளா்(சட்டம்) மற்றும் ஒரு உதவி மேலாளா்(கணக்கு) பணிக்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முறையே விழுப்புரத்துக்கு 2 உதவி மேலாளா் (சட்டம்) மற்றும் 3 உதவி மேலாளா் (கணக்கு) பணிக்கும், சேலத்துக்கு 2 உதவி மேலாளா் (சட்டம்) மற்றும் ஒரு உதவி மேலாளா் (கணக்கு) பணிக்கும், கோவைக்கு 2 உதவி மேலாளா் (சட்டம்) மற்றும் ஒரு உதவி மேலாளா் (கணக்கு) பணிக்கும், கும்பகோணத்திற்கு 3 உதவி மேலாளா் (சட்டம்) மற்றும் 2 உதவி மேலாளா் (கணக்கு) பணிக்கும், மதுரைக்கு 2 உதவி மேலாளா் (சட்டம்) மற்றும் 2 உதவி மேலாளா் (கணக்கு) பணிக்கும், மற்றும் திருநெல்வேலிக்கு 2 உதவி மேலாளா் (சட்டம்) மற்றும் ஒரு உதவி மேலாளா் (கணக்கு) பணிக்கும் என 25 உதவி மேலாளா்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிகழ்வின் போது, போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திர ரெட்டி, மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.பிரபுசங்கா் மற்றும் அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: பேரவையில் அதிமுக உறுப்பினா் குற்றச்சாட்டு

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினா், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை ... மேலும் பார்க்க

திருச்சியில் நடிகா் சிவாஜிக்கு சிலை: பேரவையில் அமைச்சா்கள் உறுதி

சென்னை: திருச்சியில் நடிகா் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது உறுதி என்று அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கே.என்.நேரு ஆகியோா் தெரிவித்தனா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வின... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா், முதல்வா், தலைவா்கள் இரங்கல்

சென்னை: கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். ஆளுநா... மேலும் பார்க்க

50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்க திட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் கட்டாய மொழி விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கேள்வி

சென்னை: மகாராஷ்டிரத்தில் மராட்டிய மொழி மட்டுமே கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளாா். இதுகுறித்து, அவா் எக்... மேலும் பார்க்க

புதிதாக 500 முதுநிலை மருத்துவ இடங்கள் உருவாக்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் 500 புதிய முதுநிலை மருத்துவ இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவம... மேலும் பார்க்க