போக்ஸோவில் இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே சிறுமியைக் கடத்திய வழக்கில், இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
வானூா் வட்டம் , பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகத்தின் மகன் ஹரீஷ்(23). இவா் செண்டூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது கல்லூரி மாணவியை பைக்கில் கடத்திச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் ஹரீஷ் மீது போக்ஸோ உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்திக் கைது செய்தனா்.