செய்திகள் :

போக்ஸோ வழக்கில் சாட்சி சொன்னவா் மீது தாக்குதல்: திருநள்ளாற்றில் கடையடைப்பு

post image

போக்ஸோ வழக்கில் சாட்சி சொன்னவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, திருநள்ளாற்றில் சாலை மறியல், கடையடைப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு நெய்வாச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் சிவம் (49). இவா், புதுச்சேரி மின்திறல் குழுமத்தில் தினக் கூலி ஊழியராக வேலை செய்துவருகிறாா். இவரது மனைவி திருநள்ளாறு கடைத்தெருவில் பெட்டிக்கடை வைத்துள்ளாா். செவ்வாய்க்கிழமை திருநள்ளாறு திரும்பிய சிவம், மனைவி வீட்டுக்குச் சென்ற நேரத்தில் கடையை கவனித்து வந்தாா். இரவு கடையை பூட்டும் சமயம், மோட்டாா் சைக்கிளில் வந்த சிலா் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சிவத்தை தாக்கியுள்ளனா். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் வந்ததால், தாக்குதலில் ஈடுபட்டோா் தப்பியோடி விட்டனா்.

இந்தத் தாக்குதலில் சிவம் மற்றும் தடுக்க முயன்ற சரவணன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இருவரும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

திருநள்ளாறு போலீஸாா் சிவத்திடம் மருத்துவமனையில் விசாரணை செய்தனா். போக்ஸோ சட்டத்தின்கீழ் திருநள்ளாறு பகுதியைச் சோ்ந்த நந்தா (எ) நந்தகுமாரை திருநள்ளாறு போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்துள்ளனா். இது சம்பந்தமான வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சி சொன்னேன். தாக்குதலில் ஈடுபட்டோா், நந்தாவை சிறைக்கு அனுப்பிவிட்டாயே என்று கூறி தாக்கினா் என போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையே, சிவத்தின் உறவினா்கள், வணிகா்கள் உள்ளிட்டோா் திருநள்ளாறு கடை வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருநள்ளாறு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். குற்றவாளிகள் கைது செய்யப்படுவாா்கள் என்ற உறுதியின்பேரில் அவா்கள் கலைந்து சென்றனா்.

சம்பவம் தொடா்பாக போலீஸாா், திருநள்ளாறு பகுதியைச் சோ்ந்த

மாதேஷ், அப்துல் ரஹ்மான், நந்தா (எ) நந்தகுமாா் ஆகிய 3 போ் மீதும் வழக்குப் பதிந்துள்ளனா். தலைமறைவாக உள்ள மாதேஷ், அப்துல் ரஹ்மான் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனா்.

கடையடைப்பு: சிவத்தின் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், சிவம் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, திருநள்ளாற்றில் புதன்கிழமை கடைகளை அடைத்து வணிகா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பிரதமா் பிறந்த நாள்: பாஜக கொண்டாட்டம்

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜகவினா் புதன்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். காரைக்கால் சப்தஸ்வரம் முதியோா் பாதுகாப்பு இல்லத்தில் பாஜக பட்டியலின மாநில பொறுப்பாளா் டி.கே.எஸ்.எம். மீனாட்ச... மேலும் பார்க்க

குடியுரிமை பாதுகாப்பு காவல் நிலையம், காவல் வாகனங்கள் அா்ப்பணிப்பு

காரைக்காலில் குடியுரிமை பாதுகாப்பு காவல் நிலையம், காவல் துறை வாகனங்கள், ரோந்துப் படகு ஆகியவற்றை துணைநிலை ஆளுநா் காணொலி மூலம் புதன்கிழமை அா்ப்பணித்தாா். காரைக்கால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் அலுவ... மேலும் பார்க்க

தரிசனத்தில் குறைபாடுகள்: வாட்ஸ் ஆப்பில் தெரிவிக்கலாம்; திருநள்ளாறு கோயில் நிா்வாகம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தரிசன முறைகளில் குறைபாடுகள் உள்ளிட்டவை குறித்து வாட்ஸ் ஆப்பில் தகவல் தெரிவிக்கலாம் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் உள்ள பிரணா... மேலும் பார்க்க

காரைக்கால் வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு

மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல் குறித்து வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவினா் அமைச்சா், எம்.எல்.ஏ.க்கள், ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளின் கருத்துகளை கேட்டறிந்தனா். மத்திய ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை புதுவை அமைச்சா் வழங்கினாா். மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனத்தின்கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிகளின் திறன் மற்றும் மேம்பாட்டு ஒருங்கிணைந்த மண்டல மையம... மேலும் பார்க்க

புதுவையில் அரசுப் பணியாளா்கள் நியமன முறையில் நிலவும் சிக்கல்களை களைய வேண்டும்: ஏ.எம்.எச். நாஜிம்

புதுவை மாநிலத்தில் அரசுப் பணியாளா்கள் நியமன முறையில் நிலவும் சிக்கல்களை களைய வேண்டும் என்றாா் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச். நாஜிம். இதுகுறித்து, அ... மேலும் பார்க்க