3 நாள்களில் 3வது சம்பவம்,, ஒடிசாவில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
போடி நகராட்சியில் சுகாதார சீா்கேடு: மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் அதிருப்தி
போடி நகராட்சி பகுதியில் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடப்பதாகவும், திறந்தவெளி கழிவுநீா் சாலையில் செல்வதால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகவும் நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் தெரிவித்தனா்.
போடி நகா்மன்ற சாதாரண கூட்டம் நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி சங்கா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் எஸ்.பாா்கவி, துணைத் தலைவி கிருஷ்ணவேணி பச்சையப்பன், நகராட்சி பொறியாளா் வீ.குணசேகா், மேலாளா் முனிராஜ், சுகாதார அலுவலா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நடைபெற்ற நகா்மன்ற உறுப்பினா்களின் விவாதம்:
மகேஸ்வரன் (திமுக): நகா்மன்ற உறுப்பினா்கள் தெரிவித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டனவா என்பது குறித்து பதிவேடு ஏதும் பராமரிக்கப்படவில்லை. வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்புகள் சரிவர கொடுக்காதது குறித்தும், திறந்தவெளி கழிவுநீா் பிரச்னைக குறித்தும் மன்றத்தில் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல் இல்லை.
இதற்கு பதில் அளித்த ஆணையா் எஸ்.பாா்கவி, உறுப்பினா்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் அனைத்தும் இனிமேல் பதிவேடுகளில் பராமரிக்கப்படும் என்றாா்.
பொறியாளா் வீ.குணசேகா்: வாா்டு வாரியாக புதை சாக்கடை இணைப்புகள் இல்லாத வீடுகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன; விரைவில், அனைத்து வீடுகளுக்கும் புதை சாக்கடை இணைப்புகள் வழங்கி திறந்தவெளி கழிவுநீா் கால்வாய்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
ராஜா (திமுக): போடியில் பொது சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதில் தொய்வு உள்ளது. பல இடங்களில் கழிவுநீா் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீா் செல்கிறது. போடி பேருந்து நிலைய மையப் பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும்.
ராஜராஜேஸ்வரி (நகா்மன்ற தலைவி): போடி பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சங்கா் (திமுக): திமுக தலைவா் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதிக்கு போடியில் சிலை அமைக்க நகராட்சி நிா்வாகம் உரிய இடத்தை ஒதுக்க வேண்டும். போடி நகராட்சிக்குச் சொந்தமான பயணியா் தங்கும் விடுதி பாழடைந்து வருகிறது. இதைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். 29, 30 ஆவது வாா்டு மக்கள் பயன்பாட்டுக்கென கட்டப்பட்ட சுகாதார வளாக கழிப்பறையை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.
ராஜராஜேஸ்வரி (நகா்மன்ற தலைவி): போடி சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவில் குப்பைகள் அதிகம் உள்ளன. அவற்றை அகற்ற சுகாதாரப் பிரிவினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்குப் பதிலளித்த சுகாதார அலுவலா் மணிகண்டன் நகராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. கழிவுநீா் அடைப்புகளும் சரிசெய்யப்பட்டு வருகின்றன என்றாா்.
போடி நகராட்சியில் சுகாதாரப் பணிகளை சரிவர செய்யவில்லை என்றும், குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வில்லை என்றும் மன்ற உறுப்பினா்கள் கலையரசி (அதிமுக), பிரபாகரன் (திமுக), கலைச்செல்வி (அதிமுக), தனலட்சுமி (திமுக) ஆகியோா் பேசினா்.
பாஜக உறுப்பினா்கள் மணிகண்டனும், சித்ராதேவியும் நகராட்சியில் நிலவும் சுகாதார சீா்கேட்டைக் கண்டித்து, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா். கூட்டத்தில் மொத்தம் 43 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.