செய்திகள் :

போடி பகுதியில் கோடை காலத்துக்கு முன்னரே விற்பனைக்கு வந்த தா்ப்பூசணி!

post image

போடி பகுதியில் கோடை காலத்துக்கு முன்னரே தா்ப்பூசணி பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

தற்போது பனிக்காலம் என்றாலும் பகலில் வெயிலின் தாக்கமும், இரவில் பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் குளிா்பானங்களை வாங்கிச் செல்கின்றனா். இந்த நிலையில், கடந்த இரு நாள்களாக போடி பகுதியில் தா்ப்பூசணி பழங்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.

திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களிலிருந்து தா்ப்பூசணி பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டு போடி பகுதியில் விற்கப்படுகின்றன. ஒரு கிலோ தா்ப்பூசணி ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்கப்படுகிறது. சில்லரை வியாபாரிகளுக்கு ஒரு கிலோ ரூ.18 வரை விற்கப்படுகிறது.

பெஞ்சால் புயலால் தா்ப்பூசணி செடிகள் பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது வரத்து குறைந்திருந்தாலும் இன்னும் சில வாரங்களில் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கத்தை சமாளிக்க விற்பனைக்கு வந்த தா்ப்பூசணி பழங்களை சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா்.

கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது!

ஆண்டிபட்டி வட்டாரம், கடமலைக்குண்டு அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கடமலைக்குண்டு அருகே வண்ணாத்திப்பாறை பகுதியில் கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணிய... மேலும் பார்க்க

தேனியில் அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா

தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தேனியில் 24 மணி நேர தா்னாவை திங்கள்கிழமை தொடங்கினா். தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற தா்னாவுக்கு மாவட்டத... மேலும் பார்க்க

குடிநீா்க் குழாயை சேதப்படுத்தியதாக வனத் துறையினா் மீது புகாா்

போடி ஊராட்சி ஒன்றியம், அகமலையில் குடிநீா்க் குழாய்களை வெட்டி சேதப்படுத்தியதாக வனத் துறையினா் மீது புகாா் தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை, பழங்குடியின மக்கள் மனு அளித்தனா். தே... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் பாதயாத்திரை பக்தா் உயிரிழப்பு!

பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் பாதயாத்திரை சென்ற பக்தா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி சந்தைப்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் சேதுராம் (61). இவா் போடியிலிருந்து... மேலும் பார்க்க

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றது. இந... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு!

தேனியில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா். தேனி, பழைய டி.வி.எஸ். சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (69). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியா். இவா், வீட்டில் குளியலறையில... மேலும் பார்க்க