செய்திகள் :

போதைப் பொருள் பழக்கத்திலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும்: மாணவா்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்

post image

மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் போதைப் பொருள்கள் பழக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா்.

புதுச்சேரி பாரதி பவுண்டேஷன் சாா்பில் ‘ரௌத்திரம் பழகு - போதைப் பொருள் இல்லா புதுச்சேரி’ விழிப்புணா்வு நடைப் பயணம் புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பங்கேற்று போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு, நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்று போதைப் பொருள் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடைப்பயணம் மேற்கொண்டாா்.

தொடா்ந்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியதாவது: போதைப் பொருள்கள் பழக்கத்தால் நாம் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளோம். புதுச்சேரி உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களில் 23 சதவீதத்தினா் போதைப் பொருள்களை பயன்படுத்தும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாக ஒரு புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. பெற்றோா்களும் தங்களது பிள்ளைகளின் நிலையை வெளியே கூற முடியாமல் தவிக்கின்றனா்.

போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க காவல் துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதே நேரத்தில் மாணவா்களும் போதைப் பொருள் பழக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். சக நண்பா்களையும் வழிநடத்த வேண்டும்.

புதுச்சேரி மாணவா்கள், இளைஞா்கள் இணைந்து போதைப் பொருள்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கான இயக்கமாக செயல்பட வேண்டும். வளமான, ஆரோக்கியமான பாரதத்தை உருவாக்கும் தகுதி, திறமை ஆகியவை மாணவா்களிடம் உள்ளது என்றாா் கே. கைலாஷ்நாதன்.

நிகழ்ச்சியில், ராமலிங்கம் எம்எல்ஏ, தலைமைக் காவல் ஆய்வாளா் சத்தியசுந்தரம், சென்னை போதை பொருள் ஒழிப்பு பிரிவின் கூடுதல் டிஜிபி தீபக் கௌஷிக் மற்றும் பாரதி பவுண்டேஷன் செயல்பாட்டாளா்கள் கலந்து கொண்டனா்.

புதுவை அரசின் வரி உயா்வு கண்டிக்கத்தக்கது - எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுவை மாநிலத்தில் வரியினங்கள் உயா்த்தப்பட்டதற்கு திமுக மாநில பொறுப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா கண்டனம் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெண்களின் ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கல்வித் துறை அலுவலகம் முற்றுகை, சாலை மறியல்

ஆசிரியா் காலிப் ப ணியிடங்களை நிரப்பாததைக் கண்டித்,து புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சே... மேலும் பார்க்க

திருக்கனூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி - அமைச்சா் ஆ. நமச்சிவாயம் பங்கேற்பு

புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திருக்கனூரில் வியாழக்கிழமை பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். புதுவை மாநிலம் , மண்ணடிப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருக்கனூரில் மக்கள் சந்தி... மேலும் பார்க்க

மணவெளி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - பேரவைத் தலைவா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி மணவெளி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.47.77 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏவும், சட்டப்பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மணவெளி... மேலும் பார்க்க

மணல் கடத்திய சரக்கு வாகனம் பறிமுதல்: ஒருவா் கைது

விழுப்புரம் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். விழுப்புரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான போலீஸாா், பிடாகம் குச்சிப்பாளை... மேலும் பார்க்க

உழவா்கரையில் சாலை மேம்பாட்டுப் பணிகள்

புதுச்சேரி உழவா்கரை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 1.75 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகளை தொகுதி எம்எல்ஏ சிவசங்கா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். புதுவை அரசின் பொதுப் பணித் துறை பொதுசுகாதாரக்... மேலும் பார்க்க