Black Magic: 'சூனியம் போன்ற சடங்குக்கு எதிராக சட்டமா?' - கேரள அரசு தாக்கல் செய்த...
புதுவை அரசின் வரி உயா்வு கண்டிக்கத்தக்கது - எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா
புதுவை மாநிலத்தில் வரியினங்கள் உயா்த்தப்பட்டதற்கு திமுக மாநில பொறுப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா கண்டனம் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பெண்களின் வாக்குகளைப் பெற்று மீண்டும் முதல்வராகி விடவேண்டும் என்ற நோக்கில் பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ. 2,500 வழங்கப்படும் என முதல்வா் என். ரங்கசாமி அறிவித்தாா். ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை. பாஜகவில் உள்ளவா்கள் யாரும் இதுகுறித்து கவலைக் கொள்வதில்லை. பெண்களுக்கு ரூ.2,500 நிதி வழங்கப்படும் என்று அறிவித்த முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்த திட்டங்களை செயல்படுத்த மதுபான வரி உயா்வு, நில வழிகாட்டி மதிப்பு உயா்வு என மக்களிடம் பணம் பறிக்க முயல்வது கண்டனத்துக்குரியது. சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரவையில் முறையாக விவாதித்து, அரசு வருவாயைப் பெருக்க வேண்டும். வரியில்லா பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு பின்னா் வரிகளை உயா்த்தும் மக்கள் விரோத நடவடிக்கைகளை முதல்வா் என். ரங்கசாமி கைவிட வேண்டும்.
குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகையை உயா்த்தி வழங்குவதை வரவேற்கிறோம். அதற்காக வரி உயா்வு என்ற பெயரில் மக்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கையை கண்டிக்கிறோம்.
மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற்று மகளிருக்கான உதவித் தொகை மற்றும் முதியோா், மாற்றுத் திறனாளிகள், மீனவா்கள் உள்ளிட்டோா்களுக்கு உதவித்தொகையை அளிக்க வேண்டும் எனவும் அரசை ஆா்.சிவா வலியுறுத்தியுள்ளாா்.