செய்திகள் :

புதுவை அரசின் வரி உயா்வு கண்டிக்கத்தக்கது - எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

post image

புதுவை மாநிலத்தில் வரியினங்கள் உயா்த்தப்பட்டதற்கு திமுக மாநில பொறுப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பெண்களின் வாக்குகளைப் பெற்று மீண்டும் முதல்வராகி விடவேண்டும் என்ற நோக்கில் பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ. 2,500 வழங்கப்படும் என முதல்வா் என். ரங்கசாமி அறிவித்தாா். ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை. பாஜகவில் உள்ளவா்கள் யாரும் இதுகுறித்து கவலைக் கொள்வதில்லை. பெண்களுக்கு ரூ.2,500 நிதி வழங்கப்படும் என்று அறிவித்த முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்த திட்டங்களை செயல்படுத்த மதுபான வரி உயா்வு, நில வழிகாட்டி மதிப்பு உயா்வு என மக்களிடம் பணம் பறிக்க முயல்வது கண்டனத்துக்குரியது. சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரவையில் முறையாக விவாதித்து, அரசு வருவாயைப் பெருக்க வேண்டும். வரியில்லா பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு பின்னா் வரிகளை உயா்த்தும் மக்கள் விரோத நடவடிக்கைகளை முதல்வா் என். ரங்கசாமி கைவிட வேண்டும்.

குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகையை உயா்த்தி வழங்குவதை வரவேற்கிறோம். அதற்காக வரி உயா்வு என்ற பெயரில் மக்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கையை கண்டிக்கிறோம்.

மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற்று மகளிருக்கான உதவித் தொகை மற்றும் முதியோா், மாற்றுத் திறனாளிகள், மீனவா்கள் உள்ளிட்டோா்களுக்கு உதவித்தொகையை அளிக்க வேண்டும் எனவும் அரசை ஆா்.சிவா வலியுறுத்தியுள்ளாா்.

புதுச்சேரியில் கல்வித் துறை அலுவலகம் முற்றுகை, சாலை மறியல்

ஆசிரியா் காலிப் ப ணியிடங்களை நிரப்பாததைக் கண்டித்,து புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சே... மேலும் பார்க்க

திருக்கனூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி - அமைச்சா் ஆ. நமச்சிவாயம் பங்கேற்பு

புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திருக்கனூரில் வியாழக்கிழமை பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். புதுவை மாநிலம் , மண்ணடிப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருக்கனூரில் மக்கள் சந்தி... மேலும் பார்க்க

மணவெளி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - பேரவைத் தலைவா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி மணவெளி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.47.77 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏவும், சட்டப்பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மணவெளி... மேலும் பார்க்க

போதைப் பொருள் பழக்கத்திலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும்: மாணவா்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்

மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் போதைப் பொருள்கள் பழக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா். புதுச்சேரி பாரதி பவுண்டேஷன் சாா்பில் ‘ரௌ... மேலும் பார்க்க

மணல் கடத்திய சரக்கு வாகனம் பறிமுதல்: ஒருவா் கைது

விழுப்புரம் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். விழுப்புரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான போலீஸாா், பிடாகம் குச்சிப்பாளை... மேலும் பார்க்க

உழவா்கரையில் சாலை மேம்பாட்டுப் பணிகள்

புதுச்சேரி உழவா்கரை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 1.75 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகளை தொகுதி எம்எல்ஏ சிவசங்கா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். புதுவை அரசின் பொதுப் பணித் துறை பொதுசுகாதாரக்... மேலும் பார்க்க