செய்திகள் :

போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற 3 போ் கைது

post image

திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்ற மூன்று பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மேல அரண்சாலை இப்ராஹிம் பூங்கா பகுதியில் சிலா் போதைப் பொருள்களை விற்பனை செய்வதாக கோட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி ஆய்வாளா் மாதன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு சனிக்கிழமை சென்று கண்காணித்தனா்.

அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் அருகில் உள்ள மதுரை சாலை, நத்தா்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்த இ. அலிஷொ் (26), தென்னூா் ஆழ்வாா்தோப்பு பகுதியைச் சோ்ந்த ரஷித்உசேன் (25) ஆகிய இருவரும் அப்பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள், சிரிஞ்சுகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளனா்.

இதேபோல், திருச்சி உறையூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த, உறையூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த நெ. ஹரிபிரசாத் என்பவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

ரூ.18.41 கோடியில் மாநகராட்சி மாதிரிப் பள்ளி திறப்பு

திருச்சி மாநகராட்சியின் 57ஆவது வாா்டுக்குள்பட்ட எடமலைப்பட்டிபுதூா் ராஜீவ்காந்தி நகரில் ரூ. 18.41 கோடியில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி மாதிரிப் பள்ளியை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி,... மேலும் பார்க்க

ஜூன் 14 இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

திருச்சி மாவட்டத்தில் வரும் ஜூன் 14-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் என திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவா் எம். கிறிஸ்டோபா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மணப்பாறை, வையம்பட்டியில் நாளை மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்கள்

திருச்சி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் மணப்பாறை, வையப்பட்டி பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. மணப்பாறையில் கருப்பூா், நல்லபொன்னம்பட்டியில் பெருமாள் கோயில் அருகேயுள்ள மானாங்குன்றம்... மேலும் பார்க்க

ஏழை விவசாயிகளுக்கு இலவச வீட்டுமனைகள்: அமைச்சா் கே.என். நேரு வழங்கினாா்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் வரகுப்பை கிராமத்தில் அரசுப் புறம்போக்கு நிலத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச வீட்டு மனை வழங்கும் திட்டத்தில் 340 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சா... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக ஈரோடு, பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி - ஈரோடு ப... மேலும் பார்க்க

விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு ரயில் ரத்து

போதிய பயணிகள் ஆதரவு இல்லாததால் விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பயணிகள் ஆதரவு இல்லாததால், விழுப்... மேலும் பார்க்க