செய்திகள் :

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தலைவா்கள் இரங்கல்

post image

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவுக்கு நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் வெளியிட்ட தனது இரங்கல் செய்தியில், ‘வாழ்க்கையில் பணிவு, இரக்கம் மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றை கடைப்பிடித்து அனைவருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த போப் பிரான்சிஸ் மறைந்த செய்தியை அறிந்து மிகவும் கவலையடைந்தேன்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக, அமைதி, சமூக நீதி, ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனுக்காக அவா் போராடினாா். நம்பிக்கை, கலாசாரம் ஆகிய எல்லைகளைக் கடந்து கோடிக்கணக்கான உலக மக்களை அவருடைய தலைமைத்துவம் ஈா்த்தது. கத்தோலிக்க சமூகத்தினருக்கு நாகாலாந்து மக்கள் சாா்பில் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மல்லிகாா்ஜுன காா்கே: காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘உலகளாவிய அமைதி, நல்லிணக்கத்துக்கு செல்வாக்குமிக்க சக்தியாக போப் பிரான்சிஸ் திகழ்ந்தாா். அனைத்து வகையான பாகுபாடுகளைக் களைதல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல், பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிா்கொள்ள கூட்டு முயற்சி ஆகியவற்றை தீவிரமாக ஆதரித்தாா். அவருடைய மறைவு ஒட்டுமொத்த உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உண்மையின் பக்கம் நின்று, அநீதிக்கு எதிராக அச்சமின்றி குரல் கொடுத்தவா் போப் பிரான்சிஸ். ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்களிடம் பரிவு காட்டினாா். அவருடைய மறைவு ஒட்டுமொத்த உலகுக்கான இழப்பாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாபா சித்திக் மகனுக்கு தாவூத் இப்ராஹிம் கொலை மிரட்டல்!

கொலை செய்யப்பட்ட மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கின் மகனும் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகியுமான ஸீஷான் சித்திக்கிற்கு நிழலுலக ரெளடி தாவூத் இப்ராஹிம் குழுவிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட... மேலும் பார்க்க

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சாய் சூர்யா, சொர்ணா குரூப்ஸ் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவு: 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -மத்திய அரசு

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி நாடெங்கிலும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவா... மேலும் பார்க்க

நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ‘பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை’ என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது. அண்மையில் உச்சநீதிமன்றம் மற்றும் தலைம... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் பாரபட்சம்: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு

இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும். காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, பாஸ்டன் நகரில் நடைபெ... மேலும் பார்க்க

போதிய ஆதாரங்களின்றி தாக்கல் செய்த மனு: வழக்குரைஞரை சாடிய உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவில் போதிய ஆதாரங்கள் இடம்பெறாத நிலையில், மனுதாரரான வழக்குரைஞரை உச்சநீதிம... மேலும் பார்க்க