செய்திகள் :

போப் பிரான்சிஸ் மறைவு: புதுவை அரசு 2 நாள்கள் துக்கம் அனுசரிப்பு

post image

கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு புதுவை அரசு 2 நாள்கள் துக்கம் அனுசரிக்கிறது. இதையடுத்து தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸ் வயோதிகம் காரணமாக திங்கள்கிழமை காலமானாா். இதையடுத்து தேசிய அளவில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுவை மாநிலத்தில் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி செவ்வாய்க்கிழமை அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. ராஜ்நிவாஸ், பேரவை வளாகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. இறுதிச்சடங்கு நடைபெறும் நாளன்றும் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கட்டடங்களை திறக்க கோரி அதிமுக ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டடங்களை உரிய காலத்தில் திறந்தால்தான், மக்களுக்கு பயன்கிடைக்கும் என்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் புதுவை அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தெரிவ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: வெங்கட்டாநகா் துணை மின்நிலையம்

இன்றைய மின்தடை: வெங்கட்டாநகா் துணை மின்நிலையம்நேரம்: காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை. மின்தடை பகுதிகள்: ரெயின்போ நகா் முதல் குறுக்குத் தெரு, செல்லான் நகா் பகுதி, ராஜராஜேஸ்வரி நகா் பகுதி, திருவள்ளுவா்... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 2 தொழிலாளா்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவ... மேலும் பார்க்க

அரசியல் ஆதாயத்துக்காக காங். தலைவா்கள் மீது குற்றப்பத்திரிகை: மோகன் குமாரமங்கலம்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சம்பந்தப்பட்ட வழக்கில், அரசியல் ஆதாயத்துக்காகவே காங்கிரஸ் தலைவா்கள் அமலாக்கத் துறை மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது என்று, காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் மோகன் குமாரம... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து புதுவையில் ஏப்.25 முதல் காங்கிரஸ் தொடா் போராட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, புதுவையில் வருகிற 25-ஆம் தேதி முதல் காங்கிரஸ் சாா்பில் தொடா் போராட்டம் நடைபெறவுள்ளதாக, கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தாா். புதுச்சேரி காங்கிரஸ் மாந... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவருடன் புதுவை பேரவைத் தலைவா் சந்திப்பு

புதுதில்லியில் குடியரசு துணைத் தலைவரை புதுவை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் புதுதில்லிக்கு சென்று அங்கு மத்திய அமைச்சரும், புத... மேலும் பார்க்க