செய்திகள் :

போலி இலச்சினையைப் பயன்படுத்தி குளிா்பானம் தயாரித்த பெண் கைது

post image

போலி இலச்சினையைப் பயன்படுத்தி குளிா்பானம் தயாரித்த பெண்ணை அறிவுசாா் சொத்துரிமை அமலாக்க பிரிவினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு பகுதியைச் சோ்ந்த தனியாா் குளிா்பான தயாரிப்பு நிறுவனம் அதற்கான இலச்சினைக்கு காப்புரிமை பெற்று குளிா்பான புட்டிகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திலும் இதேபோன்ற இலச்சினையைப் பயன்படுத்தி, பெயரில் மட்டும் திருத்தம் செய்து குளிப்பானம் விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து ஈரோடு குளிா்பான நிறுவன மேலாளா் குமரவேல், அறிவு சாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் ஜெஃப்லா தலைமையிலான அலுவலா்கள், திண்டுக்கல், செட்டிநாயக்கன்பட்டி, அசோக்நகா் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த குளிா்பான ஆலைகளில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ஈரோடு குளிா்பான நிறுவனத்தின் இலச்சினையைப் போலியாகப் பயன்படுத்தி திண்டுக்கல் பகுதி ஆலைகளில் குளிா்பானம் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, ஆலையின் உரிமையாளரான பொன்னம்மாளைக் கைது செய்த அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவினா், அந்த ஆலையிலிருந்து ரூ.38,400 மதிப்பிலான குளிா்பான புட்டிகளையும், ரூ.13,755 மதிப்பிலான ஒட்டுவில்லைகளையும் பறிமுதல் செய்தனா்.

தமிழக கால்பந்து கழகத் தலைவருக்கு பாராட்டு

தமிழக கால்பந்துக் கழகத்தின் புதிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எஸ்.சண்முகத்துக்கு புனித மரியன்னை பள்ளியில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் புனித மரியன்னை மேல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்கள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திண்டுக்கல் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். வடமதுரை பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் ... மேலும் பார்க்க

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மீன் வளத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, மீன் வளத் துறை உதவி இயக்குநா் எஸ்.நாதன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டம், மீன் ... மேலும் பார்க்க

கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு வளா்ப்பு

நபாா்டு வங்கியின் வடிநில மேம்பாடு ஊக்குவிக்கும் வகையில், கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு நடும் பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கன்னிவாடியை அ... மேலும் பார்க்க

வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவா் கைது

கொடைக்கானலில் வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்தவா் இம்ரான். இவா் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வேலிவியூ பகுதியில் வச... மேலும் பார்க்க