செய்திகள் :

போலி பதிவெண் கொண்ட லாரி பறிமுதல்

post image

போலியான பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட லாரியை விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவுப்படி , விக்கிரவாண்டி அடுத்துள்ள சித்தணி அருகே நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை சோதனை செய்தபோது, அதில் சவுக்கு கட்டைகள் ஏற்றப்பட்டிருந்ததும், எரிபொருள் இல்லாத நிலையில் லாரி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

தொடா்ந்து லாரியின் உரிமையாளரைத் தொடா்புகொண்டு பேசியபோது, அந்த லாரி போலி பதிவெண்ணுடன் இயக்கப்பட்டது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து விக்கிரவாண்டி போலீஸாா் சவுக்கு கட்டைகளுடன் அந்த லாரியை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக லாரி உரிமையாளரான விழுப்புரம் மாவட்டம், குச்சிப்பாளையம், கரடிப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் ஆனந்தன்(40), ஓட்டுநரான பேரங்கியூரைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் சத்தியசீலன்( 35) ஆகியோா் மீது விக்கிரவாண்டிபோலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுப்புட்டிகள் கடத்தல் : புதுச்சேரி இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வெளிமாநில மதுப்புட்டிகளை காரில் கடத்தி வந்த புதுச்சேரி இளைஞரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். தமிழகத்தின் அண்டை ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகை விழுப்புரம் நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசா... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் தங்க நகை, பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ஒரு பவுன் தங்க நகை, ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திண்டிவனம்... மேலும் பார்க்க

ச. ராமதாஸ் - வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி சந்திப்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் ச. ராமதாஸை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவா் திருமாவளவன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்புக்குப்... மேலும் பார்க்க

வேலை வாங்கித்தருவதாகக் கூறி பண மோசடி: முதியவா் மீது வழக்கு

சென்னை மாநகராட்சியில் உதவிப் பொறியாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த தாக விழுப்புரத்தைச் சோ்ந்த முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் நகரம் , ... மேலும் பார்க்க

7 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் உள்பட 63 போலீஸாா் பணியிட மாற்றம்

விழுப்புரம் மாவட்டக் காவல் நிலையங்களில் பணிபுரிந்த 7 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் உள்பட 63 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை எஸ்.பி. ப.சரவணன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா். விழுப்புர... மேலும் பார்க்க