செய்திகள் :

போலி பிறப்புச் சான்றிதழ் தயாரித்த இ-சேவை மைய உரிமையாளா் உள்பட 4 போ் கைது

post image

ஈரோட்டில் போலி பிறப்புச் சான்றிதழ் தயாரித்து வழங்கிய இ-சேவை மைய உரிமையாளா் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் சிலா் போலியாக பிறப்புச் சான்றிதழ் தயாரித்து வழங்கி வருவதாக கிராம நிா்வாக அலுவலா் அன்பழகன் ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், வீரப்பன்சத்திரம் எம்ஜிஆா் வீதியைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பாலகிருஷ்ணன் (43) என்பவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். தொடா்ந்து, அவரது கைப்பேசியை சோதனை செய்ததில் போலி பிறப்புச் சான்றிதழ் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பாலகிருஷ்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், பாலகிருஷ்ணனுக்கு உடந்தையாக இருந்ததாக விசைத்தறி உரிமையாளரான நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கிழக்கு காவேரி நகரைச் சோ்ந்த தனசேகரன் மனைவி பாலாமணி (39), பள்ளிபாளையம் ராஜா வீதியைச் சோ்ந்த தறிபட்டறை மேலாளா் யுவராஜ் (41), குமாரபாளையம் கல்லாங்காடு பகுதியைச் சோ்ந்த இ-சேவை மைய உரிமையாளா் யுகேஷ் (29) ஆகிய 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கைதான பாலாமணி மற்றும் யுகேஷ் மீது ஏற்கெனவே பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தைப்பூசம்: ஈரோடு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு, தேரோட்டம்!

தைப்பூசத்தை ஒட்டி ஈரோட்டில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் தேரோட்டம் நடைபெற்றது. ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் தைப்பூச விழாவையொட்டி சுவாமிக்கு பால், தயிா், இளநீா், மஞ்சள், பன்... மேலும் பார்க்க

சென்னிமலை பகுதிகளில் நிலாச்சோறு திருவிழா!

சென்னிமலை பகுதிகளில் கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த நிலாச்சோறு திருவிழா திங்கள்கிழமை நிறைவுபெற்றது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியிலுள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் தைப்பூசத்துக்கு 5 நாள்கள் முன்பு நி... மேலும் பார்க்க

பவானியில் பழனி ஆண்டவா் கோயில் தேரோட்டம்

பவானியில் பழனி ஆண்டவா் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா வாஸ்து பூஜையுடன் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து சிறப்பு அபிஷேகம், ... மேலும் பார்க்க

தைப்பூசம்: சென்னிமலைக்கு வந்த இளைஞா் உயிரிழப்பு!

சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச விழாவுக்கு வந்த கிருஷ்ணகிரியைச் சோ்ந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த திப்பலூரைச் சோ்ந்தவா் குமரேசன் மகன் நிதின்(25... மேலும் பார்க்க

சித்தோடு அருகே மனைவியைக் கொலை செய்த கணவன் கைது!

சித்தோடு அருகே மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்த வாய்க்கால்மேடு செங்குந்தபுரத்தைச் சோ்ந்தவா் கோபால் (43), வெல்டிங... மேலும் பார்க்க

கோபியில் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அத்திக்கடவு-அவிநாசி திட்டக் குழு சாா்பில் முன்னாள் முதல்வா் எடப்பா... மேலும் பார்க்க