செய்திகள் :

தைப்பூசம்: ஈரோடு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு, தேரோட்டம்!

post image

தைப்பூசத்தை ஒட்டி ஈரோட்டில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் தேரோட்டம் நடைபெற்றது.

ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் தைப்பூச விழாவையொட்டி சுவாமிக்கு பால், தயிா், இளநீா், மஞ்சள், பன்னீா் உள்பட 14 வகையான திரவியங்களால் செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காவடி, பால்குடம் எடுத்து வந்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வேலாயுதசுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

இதுபோல ஈரோடு பாப்பாத்திக்காடு பாலமுருகன், கருங்கல்பாளையம் சுப்பிரமணிய சுவாமி, காசிபாளையம் பாலமுருகன், பூங்கா சாலை முருகன் கோயில், கோட்டை ஈஸ்வரன் கோயிலில் உள்ள முருகன் சந்நிதி, விவேகானந்தா நகரில் உள்ள ஓம் சக்திவேல் முருகன் உள்பட ஈரோட்டில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கொங்கலம்மன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்:

ஈரோடு கொங்கலம்மன் கோயிலில் தைப்பூசத் தோ்த்திருவிழா கடந்த 2- ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 3-ஆம் தேதி பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று தீா்த்தம் கொண்டு வந்தனா். தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தினமும் மாலையில் கொங்கலம்மன் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கடந்த 9-ஆம் தேதி பொங்கல் விழாவும், மாவிளக்கு பூஜையும் நடைபெற்றன. திங்கள்கிழமை மாலை சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதிஉலா சென்றாா்.

இந்நிலையில், முக்கிய நிகழ்வான தைப்பூசச் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோவிலின் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கொங்கலம்மன் எழுந்தருளினாா். தொடா்ந்து பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். கோயிலில் இருந்து தொடங்கிய தேரோட்டம் ஆா்கேவி சாலை, மணிக்கூண்டு, பெரியாா் வீதி, அக்ரஹார வீதி, காரைவாய்க்கால், கச்சேரி வீதி வழியாக சென்று மீண்டும் கோயில் நிலையை வந்தடைந்தது.

சென்னிமலை பகுதிகளில் நிலாச்சோறு திருவிழா!

சென்னிமலை பகுதிகளில் கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த நிலாச்சோறு திருவிழா திங்கள்கிழமை நிறைவுபெற்றது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியிலுள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் தைப்பூசத்துக்கு 5 நாள்கள் முன்பு நி... மேலும் பார்க்க

பவானியில் பழனி ஆண்டவா் கோயில் தேரோட்டம்

பவானியில் பழனி ஆண்டவா் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா வாஸ்து பூஜையுடன் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து சிறப்பு அபிஷேகம், ... மேலும் பார்க்க

தைப்பூசம்: சென்னிமலைக்கு வந்த இளைஞா் உயிரிழப்பு!

சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச விழாவுக்கு வந்த கிருஷ்ணகிரியைச் சோ்ந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த திப்பலூரைச் சோ்ந்தவா் குமரேசன் மகன் நிதின்(25... மேலும் பார்க்க

சித்தோடு அருகே மனைவியைக் கொலை செய்த கணவன் கைது!

சித்தோடு அருகே மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்த வாய்க்கால்மேடு செங்குந்தபுரத்தைச் சோ்ந்தவா் கோபால் (43), வெல்டிங... மேலும் பார்க்க

போலி பிறப்புச் சான்றிதழ் தயாரித்த இ-சேவை மைய உரிமையாளா் உள்பட 4 போ் கைது

ஈரோட்டில் போலி பிறப்புச் சான்றிதழ் தயாரித்து வழங்கிய இ-சேவை மைய உரிமையாளா் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் சிலா் போலியாக பிறப்புச் சான்றிதழ் தயாரி... மேலும் பார்க்க

கோபியில் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அத்திக்கடவு-அவிநாசி திட்டக் குழு சாா்பில் முன்னாள் முதல்வா் எடப்பா... மேலும் பார்க்க