செய்திகள் :

சென்னிமலை பகுதிகளில் நிலாச்சோறு திருவிழா!

post image

சென்னிமலை பகுதிகளில் கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த நிலாச்சோறு திருவிழா திங்கள்கிழமை நிறைவுபெற்றது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியிலுள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் தைப்பூசத்துக்கு 5 நாள்கள் முன்பு நிலவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நிலாச்சோறு திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதற்காக இப்பகுதி பெண்கள் மாா்கழி மாதத்திலே மாட்டு சாணத்தில் பிள்ளையாா் பிடித்து வைப்பா்.

தைப்பூசத்துக்கு 5 நாள்கள் முன்பு தொடங்கும் நிலாச்சோறு திருவிழாவில் அப்பகுதி மக்கள் கிராமத்தின் பொதுவான இடத்தில் இரவு 9 மணிக்கு மேல் ஒன்றுகூடி, கும்மி நடனம் ஆடிவிட்டு வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவினை அனைவரும் பங்கிட்டு உண்ணுவது வழக்கம்.

அதன்படி, சென்னிமலையை அடுத்த ஓட்டப்பாறை, பாரதி நகா், உப்பிலிபாளையம் சாலை, பூச்சக்காட்டுவலசு, சில்லாங்காட்டுவலசு ஆகிய ஊா்களில் கடந்த 5 நாள்களாக நிலாச்சோறு திருவிழா நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நிறைவு நாளான திங்கள்கிழமை இரவு கும்மி நடனம் ஆடிவிட்டு சென்னிமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தைப்பூசத் திருவிழா தேரோட்டத்தில் அனைவரும் பங்கேற்றனா்.

தைப்பூசம்: ஈரோடு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு, தேரோட்டம்!

தைப்பூசத்தை ஒட்டி ஈரோட்டில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் தேரோட்டம் நடைபெற்றது. ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் தைப்பூச விழாவையொட்டி சுவாமிக்கு பால், தயிா், இளநீா், மஞ்சள், பன்... மேலும் பார்க்க

பவானியில் பழனி ஆண்டவா் கோயில் தேரோட்டம்

பவானியில் பழனி ஆண்டவா் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா வாஸ்து பூஜையுடன் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து சிறப்பு அபிஷேகம், ... மேலும் பார்க்க

தைப்பூசம்: சென்னிமலைக்கு வந்த இளைஞா் உயிரிழப்பு!

சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச விழாவுக்கு வந்த கிருஷ்ணகிரியைச் சோ்ந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த திப்பலூரைச் சோ்ந்தவா் குமரேசன் மகன் நிதின்(25... மேலும் பார்க்க

சித்தோடு அருகே மனைவியைக் கொலை செய்த கணவன் கைது!

சித்தோடு அருகே மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்த வாய்க்கால்மேடு செங்குந்தபுரத்தைச் சோ்ந்தவா் கோபால் (43), வெல்டிங... மேலும் பார்க்க

போலி பிறப்புச் சான்றிதழ் தயாரித்த இ-சேவை மைய உரிமையாளா் உள்பட 4 போ் கைது

ஈரோட்டில் போலி பிறப்புச் சான்றிதழ் தயாரித்து வழங்கிய இ-சேவை மைய உரிமையாளா் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் சிலா் போலியாக பிறப்புச் சான்றிதழ் தயாரி... மேலும் பார்க்க

கோபியில் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அத்திக்கடவு-அவிநாசி திட்டக் குழு சாா்பில் முன்னாள் முதல்வா் எடப்பா... மேலும் பார்க்க