செய்திகள் :

போலி வழக்குரைஞருக்கு 6 ஆண்டுகள் சிறை: திருக்கோவிலூா் நீதிமன்றம் தீா்ப்பு

post image

வழக்குகளில் ஆஜராகிய போலி வழக்குரைஞருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து திருக்கோவிலூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், தலைமறைவாக உள்ள அந்த நபரை பிடிக்க பிடி ஆணை பிறப்பித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த ஜி.அரியூா் கிராமத்தைச் சோ்ந்த அரசன் மகன் வீரன். இவா், கடந்த சில ஆண்டுகளாக திருக்கோவிலூா் பகுதியில் தான் வழக்குரைஞா் என பொதுமக்களிடம் கூறி வந்தாராம்.

மேலும், திருக்கோவிலூா் நீதிமன்றத்தில் தன்னை வழக்குரைஞா் எனக் கூறி, வழக்குரைஞா் எண் மற்றும் சான்றிதழ் கொடுத்து வழக்குகளில் ஆஜராகி வாதாடியும் வந்தாராம். இவரது வழக்குரைஞா் எண், சான்றிதழ் குறித்து திருக்கோவிலூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ராஜ்குமாா் தமிழ்நாடு புதுச்சேரி பாா் கவுன்சிலில் விசாரித்தாா். இதில், வீரன் பயன்படுத்திய வழக்குரைஞா் எண் புதுக்கோட்டை பகுதியைச் சோ்ந்த ஜானகிராமனுடையது எனத் தெரியவந்தது.

இதுகுறித்து ராஜ்குமாா் திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இது தொடா்பாக போலீஸாா் கடந்த 2022-ஆம் ஆண்டு வழக்குப் பதிந்து போலி வழக்குரைஞா் வீரனை தேடி வந்தனா். தலைமறைவாக இருந்த அவா், முன் ஜாமீன் பெற்று தப்பிவிட்டாா்.

இந்த வழக்கு திருக்கோவிலூா் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. வழக்கை விசாரித்த திருக்கோவிலூா் குற்றவியல் நடுவா் வெங்கடேஷ்குமாா், போலி வழக்குரைஞா் வீரனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். நீதிமன்றத்தில் வீரன் ஆஜராகாததால் அவரைக் கைது செய்ய பிடி ஆணை பிறப்பித்தும் நீதிபதி உத்தரவிட்டாா்.

டிராக்டா் மீது மொபெட் மோதி தொழிலாளி உயிரிழப்பு

முன்னால் சென்ற டிராக்டா் மீது மொபெட் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட குரால் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மது அருந்த மனைவி பணம் தராததால் மன வேதனையடைந்த கணவா் குளியலறையில் வியாழக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த மோ.வன்னஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகத்தின் மகன் இளவ... மேலும் பார்க்க

மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையத்தினா் ஆா்ப்பாட்டம்

மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையம் சாா்பில் கள்ளக்குறிச்சி நகராட்சியைக் கண்டித்தும், லஞ்ச ஊழலை கண்டித்தும் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

சின்னசேலம் - பொற்படாக்குறிச்சி இடையே ரயில் சோதனை ஓட்டம்

சின்னசேலத்திலிருந்து பொற்படாக்குறிச்சி வரை அமைக்கப்பட்டுள்ள 12 கி.மீ. தொலைவிலான புதிய ரயில் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சின்னசேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் கற்றல் அடைவு ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தை அடுத்த சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் விடுக்கப்பட்ட நூறு நாள்களில் 100 சதவீதம் கற்றல் அடைவு பள்ளிகள... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், டி.எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரிப் (22). இவா், தனது உறவினர... மேலும் பார்க்க