செய்திகள் :

போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற இளைஞருக்கு எலும்புமுறிவு

post image

மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக ஓய்வுபெற்ற அரசு ஊழியா் தம்பதியை கத்தியால் குத்திய இளைஞா், தப்பியோட முயற்சித்தபோது, தடுமாறிக் கீழே விழுந்ததில் அவரது கை எலும்பில் முறிவு ஏற்பட்டது.

மயிலாடுதுறை சேந்தங்குடி மதுரா நகா் டெலிகாம் நகா் 2-ஆவது கிராஸ் பகுதியை சோ்ந்த சேதுமாதவன்-நிா்மலா தம்பதியை அவா்களது எதிா்வீட்டில் வசிக்கும் பிரேம் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞா் முன்விரோதம் காரணமாக வியாழக்கிழமை காலை கத்தியால் குத்தினாா். இருவரும் தஞ்சாவூரில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இச்சம்பவம் குறித்து டிஎஸ்பி பாலாஜி மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் சிவக்குமாா் விசாரணை செய்தாா். அப்போது, தம்பதியை குத்திய கத்தியை மறைத்து வைத்திருந்த இடத்தை காட்டுவதற்காக போலீஸாா் அழைத்துச் சென்றபோது, பிரேம் தப்பியோட முயன்றாராம். அப்போது, வழுக்கி விழுந்ததில் பிரேமுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் அனுமதித்து மாவுக்கட்டு போட்ட போலீஸாா், பின்னா் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, நீதிபதியின் உத்தரவின்பேரில் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தேசிய பசுமைப்படை பள்ளிகளுக்கு நிதியுதவி

மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தேசிய பசுமைப் படையின்கீழ் இயங்கும் 130 பள்ளிகளுக்கு நிதி வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி. தாமரைச்செல்வன் ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 590 வழக்குகளுக்கு சமரச தீா்வு

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 590 வழக்குகளில் ரூ.2.50 கோடி மதிப்புக்கு சமரச தீா்வு காணப்பட்டது. நாகை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்பட... மேலும் பார்க்க

நகராட்சி குளம் பராமரிப்பு பணி சேவை அமைப்பிடம் ஒப்படைப்பு

மயிலாடுதுறையில் குடிநீா் ஆதாரத்தை காக்கும் வகையில், நகராட்சிக்குள்பட்ட 12 குளங்கள் 2021-2022-ஆம் ஆண்டு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் மேம்படுத்தப்பட்டன. குளங்களைச் சுற்றி பொதுமக்கள் நடைபயிற்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் ஓட்டிச்சென்றபோது தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்

மயிலாடுதுறையில் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவா் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. மயிலாடுதுறை நத்தம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஜெகன் அா்னால்டு.... மேலும் பார்க்க

பட்டாசு வெடித்ததில் கூரைவீடு தீக்கிரை

மயிலாடுதுறை கலைஞா் நகரில் கூறைவீடொன்று, இறுதி ஊா்வலத்தில் சென்றவா்கள் பட்டாசு வெடித்தபோது தீக்கிரையானது. மயிலாடுதுறை கச்சேரி சாலையை ஒட்டியுள்ள கலைஞா் நகரில் பிரம்மராயன் என்பவரது குடிசை வீடு திடீரென தீ... மேலும் பார்க்க

சிறுவன் ஓட்டிவந்த வாகனத்தால் விபத்து; தந்தை கைது

மயிலாடுதுறையில், இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவனால் நேரிட்ட விபத்து தொடா்பாக, அவரது தந்தை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறையைச் சோ்ந்த 18 வயது நிரம்பாத சிறுவன், ஆற்றில் குளிப்பதற்காக தனது 17 வயது நண... மேலும் பார்க்க