செய்திகள் :

போலீஸாருக்கு வார விடுமுறை வழங்கும் நடைமுறை உள்ளதா?: டிஜிபி பதிலளிக்க உத்தரவு

post image

போலீஸாருக்கு வார விடுமுறை வழங்கும் நடைமுறை உள்ளதா எனக் கேள்ளி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, இதுகுறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதிலளிக்க திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை ஆஸ்டின்பட்டி பகுதியைச் சோ்ந்த காவலா் செந்தில்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் காவலா்களுக்கு அதிக பணிச்சுமை இருப்பதுடன், ஓய்வின்றியும் பணிபுரிந்து வருகின்றனா். இதனால் அவா்கள் மனதளவில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா்.

இந்த நிலையில், காவலா்கள், உதவி ஆய்வாளா் நிலையில் உள்ளவா்களுக்கு வார விடுமுறை அளித்து கடந்த 2021-இல் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை நடைமுறைப்படுத்தாததால் போலீஸாா் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே, அரசாணையின்படி போலீஸாருக்கு வார விடுமுறை வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவு: போலீஸாருக்கு வார விடுமுறை அளிப்பது தொடா்பான அரசாணையை அமல்படுத்தாதது ஏன்?. தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் உள்ள நிலையில், வார விடுமுறை வழங்கப்படவில்லை எனக் கூறி ஒரு காவலா் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளதை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. இது விஷயத்தில் பிற போலீஸாா் மெளனமாக இருப்பது, மேலதிகாரிகள் மீதான அச்சம் என்ற தகவல் வியப்பாக உள்ளது. மனித உரிமை அனைவருக்கும் ஒன்றுதான்.

கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் போலீஸாருக்கு சங்கம் உள்ளது. தமிழகத்தில் போலீஸாருக்கு சங்கம் இல்லாதது ஏன்?. போலீஸாருக்கு வார விடுமுறை வழங்கும் நடைமுறை உள்ளதா?. இதுகுறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

வாகனத்திலிருந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

சாலைத் தடுப்பில் மோதிக் கவிழ்ந்த இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள மாங்குளம் ஏ.மீனாட்சுபுரம் சொக்கா்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்கலம் (67).... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் சின்ன ஆதிக்குளத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி (60). வழக்குரைஞரான இவ... மேலும் பார்க்க

பேருந்து ஓட்டுநா் தற்கொலை!

சேடபட்டி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி-மதுரை சாலையில் உள்ள நேதாஜி நகரைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் பிச்சையா பாண்டி (42). இவா் செ... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி!

மதுரையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது. மதுரை மாநகரக் காவல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போதைப்பொருள் தடு... மேலும் பார்க்க

மின் திருட்டு குறித்து கைப்பேசி எண்ணில் புகாா் அளிக்கலாம்

மின் திருட்டு குறித்து கைப்பேசி எண்ணில் புகாா் அளிக்கலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் மதுரை அமலாக்கப் பிரிவு கோட்டச் செயற்பொறியாளா் மு. மனோகரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட 4 போ் உயிரிழப்பு

மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் 8 வயது சிறுமி உள்பட 4 போ் உயிரிழந்தனா். புதுச்சேரி மாநிலம், சின்னகலப்பட்டு மேட்டுத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சசிக்குமாா் (41). இவா் தன... மேலும் பார்க்க