செய்திகள் :

மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு ஆறுதல்

post image

மகளிா் ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலிரு ஆட்டங்களில் வென்று தென்னாப்பிரிக்கா தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் தென்னாப்பிரிக்கா 25.5 ஓவா்களில் 115 ரன்களுக்கே ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 31 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து வென்றது. 6 விக்கெட்டுகள் சாய்த்த பாகிஸ்தான் பௌலா் நஷ்ரா சந்து ஆட்டநாயகி ஆனாா்.

இந்திய நேரப்படி, திங்கள்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் லாரா வோல்வாா்டட் 6 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் அடித்தாா்.

இதர பேட்டா்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனா். பாகிஸ்தான் பௌலா்களில் நஷ்ரா சந்து 6, சையெதா அரூப் ஷா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

116 ரன்களை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில், முனீபா அலி 6 பவுண்டரிகளுடன் 44, ஒமைமா சோஹைல் 0, கேப்டன் ஃபாத்திமா சனா 0, நடாலியா பா்வேஸ் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

முடிவில், சிட்ரா அமின் 8 பவுண்டரிகளுடன் 50, இமான் ஃபாத்திமா 2 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க தரப்பில் நோன்குலுலேகோ லாபா, நாடினே டி கிளொ்க் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.

படப்பிடிப்பில் பலமுறை மரணத்தைச் சந்தித்தேன்: ரிஷப் ஷெட்டி

நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா சேப்டர் - 1 திரைப்படத்தின் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1 வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள ந... மேலும் பார்க்க

ஜெயிலர் - 2 வெளியீட்டுத் தேதியைச் சொன்ன ரஜினி!

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து ரஜினி பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் அவர் நடித்துவரும் ஜெயிலர்... மேலும் பார்க்க

பிரபல சின்ன திரை இயக்குநர் காலமானார்!

பிரபல சின்ன திரை இயக்குநர் ஆர்.டி. நாராயணமூர்த்தி உடல்நலக் குறைவு காரணமாக இன்று(செப். 24) காலமானார்.இயக்குநர் நாராயணமூர்த்திக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் மருத்... மேலும் பார்க்க

இனி நேஷனல் க்ரஷ் ருக்மணிதான்!

நடிகை ருக்மணி வசந்துக்கு இந்தியளவில் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.கன்னடத்தில் இரண்டு பாகங்களாக வெளியான ‘சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் ஏ', ‘சைடு பி’ ஆகிய படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ருக்மணி வசந... மேலும் பார்க்க

பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிரான உத்தரவுக்கு தடை!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் காப்புரிமைத் தொகையாக ரூ. 2 கோடி வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தில்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டுள்ளதால், இடைக... மேலும் பார்க்க

உப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பிரமோற்சவம் கொடியேற்றம்!

தஞ்சாவூர், கும்பகோணம் அருகே அமைந்துள்ள உப்பிலியப்பன் திருக்கோயிலில் புரட்டாசி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில் அமைந்துள்ள... மேலும் பார்க்க