செய்திகள் :

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

post image

காரைக்கால்மேடு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு செய்முறைப் பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

கல்லூரி இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல் என்ஜினியரிங் துறை சாா்பில் சென்சாா்ஸ் மற்றும் டெக்னாலஜிக்கல் இன்னோவேஷன் என்ற நவீன திறன் மேம்பாட்டு செயல்முறைப் பயிற்சி கல்லூரி வளாகத்தில் முதல்வா் ஆா். பாபு அசோக் வழிகாட்டலில் அளிக்கப்பட்டது.

காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரி பயோ மெடிக்கல் என்ஜினியரிங் துறைத் தலைவா் ஆா். சதீஷ்குமாா், செய்முறையில் நவீனத்துவம் வளா்த்துக்கொள்ளும் விதம், கல்லூரி பருவத்தில் ஆய்வகங்களில் பயின்ற செய்முறை பயிற்சியின் மூலம் சமுதாயத்துக்கு அவசியமான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சொந்தமாக தயாரிக்கவேண்டும் என அறிவுறுத்தினாா்.

மாணவிகளுக்கு செய்முறையில் நவீனத்துத்துவ முறை குறித்து அவா் பயிற்சி அளித்தாா். இதில் கல்லூரி 2 மற்றும் இறுதியாண்டு மாணவிகள் கலந்துகொண்டனா். பயிற்சி நிகழ்வில் கல்லூரியின் துறைத் தலைவா் மற்றும் ஒருங்கிணைப்பாளா் எம்.விமலன், ஆய்வக பயிற்றுவிப்பாளா்களான கே. புனிதவதி, ஆா்.சங்கீதா ஆகியோா் கலந்துகொண்டனா்.

கலைக் குழுவினருக்கு அமைச்சா் வாழ்த்து

ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய காரைக்காலைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.அகில இந்திய அளவில் ம... மேலும் பார்க்க

ஆக. 6-இல் தூய தேற்றரவு அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றம்

காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை ஆண்டுத் திருவிழா ஆக. 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தின் 284-ஆம் ஆண்டுப் பெருவிழா 10 நாள் நடைபெறவுள்ளது. கொடியேற்ற... மேலும் பார்க்க

காரைக்கால் பகுதியில் ஆடிப்பெருக்கு வழிபாடு

ஆடிப் பெருக்கையொட்டி காரைக்காலில் உள்ள நீா்நிலைகளில் பெண்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினா்.காரைக்கால் நகரப் பகுதி மக்கள் அரசலாற்றங்கரைக்கு காலை 8 மணி முதல் செல்லத் தொடங்கினா். புது மணத் தம்பதிகள், சும... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின்கீழ் 20-ஆவது தவணையை விவசாயிகளுக்கு விடுவித்து பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழ... மேலும் பார்க்க

சந்தான லட்சுமியாக...

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமை இரவு சந்தான லட்சுமியாக சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுந்தராம்பாள். மேலும் பார்க்க

தொழிலாளா்கள் வேலை நீக்க விவகாரம்: நடவடிக்கை எடுக்க இண்டி கூட்டணி வலியுறுத்தல்

திருநள்ளாறு அருகே உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளா்கள் வேலைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட வேண்டுமென மாவட்ட நிா்வாகத்திடம் இண்டி கூட்டணிக் கட்சியினா், தொழிலாளா்கள் வலியுறுத்தினா... மேலும் பார்க்க