செய்திகள் :

மகளுக்காக வேலையை விட்ட அம்மாவின் மனப் போராட்டமும் மகிழ்வும்! - உணர்வுப் பூர்வ கடிதம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

என் மகளாகிய அன்பு தோழிக்கு,

ஏப்ரல் 19 , 2014 என்ற தேதியை மறக்க முடியாது.  வேலையில் இருந்து ஓய்வு எடுத்து ,நன்றாக என் அம்மா கையில் ருசியாக சாப்பிட்டு, ஒரு மாதம் கழித்து உன்னை இந்த உலகத்துக்கு கொண்டு வரலாம் என்று நினைக்கையில். அது எப்படி நீங்கள் முடிவு செய்யலாம், என் வருகையை நான் தான் முடிவு செய்வேன் என்று நாலு வாரங்கள் முன்னதாகவே வந்துவிட்டாய். 

என் பிரசவ வலி அனைத்தும், அரைமயக்கத்தில் உன்னை முத்தம் இட்டதும் போய் விட்டது . 

சரி இனி எல்லாம் சுகம் என்று நினைத்து கொண்டு இருக்கையில், hospital இல் ஒரே பரபரப்பு. 

நீ மூச்சுவிட சிரமப்படுகிறாய் என்று, உன்னை வேகமாக தூக்கி கொண்டு ஓடினார்கள். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. உன்னை என்னிடம் கொண்டு வந்து சேர்பதற்குள் , பிரித்துவிட்டார்கள். 

Ambulanceஇல் ஏற்றி, வேறு hospital இல் உன்னை மாற்றி, பின்னாடியே நானும் அங்கு வந்து சேர்ந்தேன். 

குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் நீ. உன்னை பார்க்க வந்த போது, என் உள்ளங்கை தொடங்கி என் முழங்கை வரைகூட இல்லாத அளவு தான் நீ.

பார்த்ததும் மனசு கனத்து போனது. ஒரு பக்கம் , நீ நல்லபடியாக வந்துவிட்டாய் என்று நினைத்து , ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, தாய்மையின் பெரும் இன்பம் தரும் உயிர் பாலை கொடுக்க சொன்னார்கள். மூச்சு விடாமல் சிரமப்படுகிறாய் என்று, என்னை எடுத்து தர சொன்னார்கள்.

எனக்கு போதுமானது வரவில்லை என் தங்கமே, உன்னை பெற்று எடுக்கும்போது வந்த வலியை காட்டிலும் இது பெருவேதனையாக இருந்தது. தாய்மையின் பங்கை தர முடியவில்லை என்று அழுதேன். உணவில் மாற்றம் செய்தார்கள். Tension , stress ஆகாதிங்க, பால் சுரக்காது என்றார்கள். நீ ஒரு இடத்திலும், நான் ஒரு இடத்திலும் இருக்கும்போது , எப்படி மனநிம்மதி இருக்கும். 

மூன்று நாட்கள் கழித்து, நீ என்னோடு வந்தாய், இனி எல்லாம் சரி ஆகிவிடும் என்று நம்பியிருந்தேன், அந்த நேரத்தில் ஒரு பெரிய இடி வந்து சேர்ந்தது , எனக்கு மஞ்சள் காமாலை இருக்கிறது என்ற blood report . ஒடிந்து போனேன். குழந்தைக்கு தாய் பால் கொடுக்கக்கூடாது, உப்பு இல்லாத பத்திய சாப்பாடு என்று அடுக்கடுக்காய் இடி விழுந்தது. 

அம்மாவாக இருக்கும் தகுதியே போய்விட்டது போல் , மனது அளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன். 

தாய்ப்பால் இல்லாத குழந்தைக்கு ஆரோகியமே இருக்காது. குழந்தைக்கு உடம்பே இல்லை , powder பால் குடுத்தா, motion பிரச்சனை வரும். இந்த மாறி , அக்கம்பக்கத்தினர், உறவுகள், ஆளுக்கொரு கருத்தை சொன்னார்கள்.  கடினமான நாட்களை அழுகை, புலம்பல் என்று உன் அப்பாவோடு பகிர்ந்து கடந்து வந்தேன். 

ஒரு வருடம் உருண்டு ஓடியது, மறுபடியும் IT  பணியில் சேர்ந்தேன். வேலைய தக்கவைத்துக்கொள்ள appraisal rating மிகவும் முக்கியம்.  late night , night shift என்று ஓடி கொண்டு இருந்தேன். உன் அப்பா, இருவீட்டின்  தாத்தா  ,பாட்டிகள் உன்னை பார்த்துக் கொள்வார்கள்.

உன்னை வார விடுமுறை  நாட்களில் தான் நான் கவனித்து கொள்வேன். ஒரு முறை, என்னிடம் வராமல், என் அம்மாவிடம் தான் செல்வேன் என்று கூறியபோது,அம்மாவை புறக்கணிக்கும் அளவிற்கு  நான் இருந்து விட்டேன் என்ன குற்றவுணர்ச்சி  உடைந்து அழுதேன். 

வேலைய விட முடியாத சூழ்நிலையால் , பல்லை கடித்துக்கொண்டு காலங்களை ஓட்டினேன். 

வருடங்கள் வேகமாக நகர்ந்தன , இடையில் உன் அப்பா, குடும்பத்தின் தேவைக்காக சென்னையில் வேலைக்கு சேர்ந்தார். கூட்டு குடும்பமாக இருந்ததால் , உன்னை வளர்ப்பது எளிதாக இருந்தது. இருந்தாலும் உன்னை முழு நேர அம்மாவாக இருந்து பார்த்து கொள்ள முடியாத வேதனை வந்து வந்து கொல்லும்.

2019 , மே 2  என் அப்பாவின் எதிர்பாராத மறைவால் பாதிக்கப்பட்டேன். கடந்து போவது தானே வாழ்க்கை.  நேரத்தில் உன் அப்பாவிற்கு, சென்னையில் இருந்து கோவை மாற்றல் ஆகியது ஆறுதலாக இருந்தது.

2020 இல் corona, work from home , online class. Work tension, வீட்டு வேலை, உன்னோடு  online class இல் அமர்வது என்று work life balance இல்லாமல்  மீண்டும்  stress இல் தள்ளப்பட்டேன் . school இல் இருந்து வரும் defaulters list இல் உன் பெயர் வரும், நீ என்னோடு பேச விரும்பும்போது, எனக்கு onsite call இருக்கும். 

வேலையில் இருக்கும் கோவத்தை உன்னிடம் காட்டுவேன். உன் முகம் வாடியதை நினைத்து வேதனை படுவேன். முதலில் ஒரு நல்ல அம்மா ,மனைவி, குடும்பத்தலைவி ஆகலாம் என்று முடிவு எடுத்து, பலவித மனப்போராட்டங்களை தாண்டி, உன் அப்பாவின் ஆதரவோடு பதினைந்து வருடமாக செய்த வேலையை விட்டுவிட்டேன் . 

வேலைய விட்டுட்டியா?

வேலை கிடைக்கறது எவ்ளோ கஷ்டம்?

இந்த கம்பெனில திரும்ப கிடைக்குமா ?

எவ்ளோ நல்ல சம்பளம் ?

முட்டாள் தனமான முடிவு?

யோசிச்சு பாத்தியா ?

வீட்ல சும்மா இருக்க போறயா ?

வீட்டு கடன் அடைக்கற வரைக்கும் கொஞ்ச நாள் கஷ்டப்படு?

ஒரு சம்பளத்துல இப்போ இருக்க வெளவாசில குடும்பம் நடத்தமுடியுமா ?

நேரடியாகவும் , என் முகத்து பின்னால் இருந்த கேள்விகள் ஏராளம். உன்னைத்தவிர  யாரை   பற்றியும் நான் யோசிக்கவில்லை. வேலையை விட்டு வீட்டில் இருந்தால், நான் இழந்து விடுவேன்  என்று நினைத்தது .

1 )Respect (மரியாதை)

2 ) Financial  Freedom (நிதி சுதந்திரம்)

3 ) Self discipline (சுய ஒழுக்கம்)

4 ) Independency (சுதந்திரம்)

ஆனால் இந்த 5 வருடத்தில் நான் எதையும் இழக்கவில்லை, என் எண்ணங்கள் அனைத்தும் பொய் ஆகி நான் பெற்றது,

1) Self Love

2) Personal  and  Family Time  

3) Lovable Mother

4 )Strict  teacher

5) Learning Chef

6) Peaceful Mind and Sleep

7 ) Healthy Life Style

இதனில் நான் கற்று கொண்ட பாடம் , முடிவு எடுப்பது கடினம் ஆனால் முடிவு எடுத்து விட்டால் அதற்கு ஏற்றாற்போல் வாழ பழகிக்கொள்வோம். பொருளாதார நெருக்கடி, உடல் நல பிரச்சனை அனைத்தும் வந்தது, கூடவே இருப்பதை கொண்டு சமாளிக்கும் பழக்கம்  வந்தது. 

தற்போது உனக்கு 12 வயது ஆகிவிட்டது, என்னோடு எல்லாவற்றையும் பகிர்ந்து கொல்லும் எனக்கு ஒரு நல்ல தோழியாக மாறிவிட்டாய், சில நேரங்களில் எனக்கு பாடங்களை சொல்லி தரும் ஆசானாக மாறிவிட்டாய், வாய் இல்லாத ஜீவன்களை கூட, மனித நேயத்தோடு நீ பார்த்து, உதவி செய்யும் போது,  நீ சிறந்த மனிதன் ஆக இருப்பதை காண்கிறேன்.

நிதி நிலைமையை உணர்ந்து , நீ புரிந்து நடந்து கொள்வாய், பிடிவாதம் கிடையாது, என் முகம் வாடினால் உனக்கு தாங்காது, என்னை சிரித்த முகத்துடனே பார்க்க வேண்டு என்று எண்ணுவாய். நான் எடுத்த முடிவு தவறே இல்லை, என் மகளை நாங்கள் நன்றாகவே வளர்த்து இருக்கிறோம் என்று பெருமையாக இருக்கிறது. 

கடவுள் எது செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும், பல இன்னல்களை கொடுத்து எங்களுக்கு ஒரு வரத்தை கொடுத்து உள்ளான்.  ஆமாம் , அப்டி ஒரு வரம் தான் எங்களுக்கு என்று கிடைத்த என் மகள் அதித்தீ.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

எனக்காக செலவழிக்கும் பணத்துக்கு, கணக்கு பார்க்கிறாய்! - அப்பாவின் புலம்பல் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அப்பா உன்னை அடிக்கும் போது நான் எதுவுமே செய்யாமல் நின்றேனே! - மகளின் மன்னிப்பு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பிளாங்டன் மீனாக பறந்து வா அப்பா - மகனின் கண்ணீர் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

என் துணிப் பெட்டில கொஞ்ச பணத்தோட நீங்க வெச்ச துணிப்பை இன்னனும் இருக்குப்பா! - மகனின் கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Sri Aurobindo: 'கடவுளும் ரோஜாவும்...' - ஸ்ரீ அரவிந்தர் | கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 17

தத்துவ ஞானி, யோகி, குரு, கவிஞர் எனப் பன்முகங்கள் கொண்ட அரவிந்தர் எப்போது எனக்கு அறிமுகமானாரென்று சரியாக நினைவுக்கு வரவில்லை. பள்ளியில் படிக்கும்போது பேச்சுவாக்கில் வந்தவரென நினைக்கிறேன். மூட்டமான கவித... மேலும் பார்க்க

நான் தப்பு பண்ணிருந்தாலும், அப்பா கேட்குற முதல் கேள்வி, ‘சாப்டியாம்மா?’ - மகளின் கண்ணீர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க