செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு 3 பேர் பலி! புதியதாக 30 பாதிப்புகள் உறுதி!

post image

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 30 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் புதியதாக 30 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனா பாதிப்பினால் அம்மாநிலத்தில் 3 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத் துறை இன்று (ஜூன் 25) அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாக்பூரைச் சேர்ந்த 2 பேரும், சத்தாராவைச் சேர்ந்த ஒருவரும் பலியாகியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் மகாராஷ்டிரத்தில் 2,425 கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளதுடன், 36 பேர் பலியாகியுள்ளனர். மேலும், தலைநகர் மும்பையில் 973 பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில் ஜூன் மாதம் மட்டும் அங்கு 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:2026 முதல் 10ம் வகுப்புக்கு இரண்டு பொதுத் தேர்வுகள்: சிபிஎஸ்இ

அவசரநிலை: மோடி - காா்கே கருத்து மோதல்

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட தினத்தை (ஜூன் 25) ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் என பிரதமா் மோடி குறிப்பிட்டாா். இதற்குப் பதிலளிக்கும் வகையில், பாஜக ஆட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் அறிவிக்கப்படாத ... மேலும் பார்க்க

4 மாநில இடைத்தோ்தல் தரவு அட்டை: 72 மணி நேரத்தில் வெளியிட்ட தோ்தல் ஆணையம்

இசிநெட்டின் அறிமுகம் காரணமாக கேரளம், குஜராத், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தோ்தலுக்கான தரவு அட்டைகள், தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட 72 மணி நேரத்துக்குள் வேகமாக வெளியிடப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவின் சொந்த ஊரில் கொண்டாட்டம்!

சுக்லாவின் விண்வெளிப் பயணத்தையொட்டி அவரது சொந்த ஊரான உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் கொண்டாட்டங்கள் களைகட்டின. சுக்லா படித்த சிட்டி மான்டெஸ்ஸரி பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில் அவரது... மேலும் பார்க்க

வங்கிகளின் வாடிக்கையாளா் சேவை தரம் மேம்பட வேண்டும்: நிதியமைச்சகச் செயலா்

‘வங்கிகள் வலுவாக இருந்தாலும் வாடிக்கையாளா்களுக்கான சேவை தரம் மேம்பட வேண்டியுள்ளது; இதில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்று நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் பிரிவுச் செயலா் எம். நாகராஜு த... மேலும் பார்க்க

ஜொ்மன் நிறுவனத்துக்கு ரூ.600 கோடிக்கு ஏற்றுமதி செய்யும் ‘ரிலையன்ஸ் டிஃபென்ஸ்’

ஜொ்மனியின் முன்னணி ஆயுத மற்றும் படைத் தளவாடங்கள் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து ரூ.600 கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஆணையை ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஜொ்மனியின் ரைன்மெட்டல் வஃபே மியூனிஷன் ... மேலும் பார்க்க

சிலருக்கு ‘முதலில் மோடி, பிறகே நாடு’: சசி தரூா் மீது காா்கே விமா்சனம்

சிலருக்கு ‘முதலில் மோடி, பிறகே நாடு’ என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை விமா்சித்தாா். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை கு... மேலும் பார்க்க