செய்திகள் :

சிலருக்கு ‘முதலில் மோடி, பிறகே நாடு’: சசி தரூா் மீது காா்கே விமா்சனம்

post image

சிலருக்கு ‘முதலில் மோடி, பிறகே நாடு’ என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை விமா்சித்தாா்.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றில், அண்மையில் சசி தரூா் கட்டுரை எழுதினாா். அதில் , ‘பிரதமா் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பான இயக்கம், செயலாற்றத் தயாராக இருப்பது ஆகியவை உலக அரங்கில் இந்தியாவின் முதன்மையான சொத்தாக உள்ளது’ என்று பாராட்டினாா்.

இது அவா் மீது காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தி, கட்சித் தலைமையுடனான அவரின் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுகிறது.

இதுதொடா்பாக புது தில்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘என்னால் ஆங்கிலத்தில் நன்றாக வாசிக்க முடியாது. ஆனால் சசி தரூருக்கு மிக நன்றாக ஆங்கிலம் தெரியும். இதன் காரணமாகவே அவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக்கப்பட்டாா்.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் ராணுவத்துக்கு துணை நிற்பதாக எதிா்க்கட்சிகள் ஒன்றாக தெரிவித்தன. அப்போது பிற விஷயங்களைவிட நாடே மிகவும் முக்கியமானது என்றும், மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் காங்கிரஸ் தெரிவித்தது.

‘முதலில் நாடு, பிறகே கட்சி’ என்று காங்கிரஸ் தெரிவித்தது. ஆனால் ‘முதலில் மோடி, பிறகே நாடு’ என்று சிலா் கூறுகின்றனா். இதை என்ன செய்வது?

தனது சொந்த விருப்பத்தின்பேரில் சசி தரூா் பேசி வருகிறாா். நாட்டை எப்படி காப்பாற்றவது என்பதில் காங்கிரஸ் மிகுந்த கவலை கொண்டுள்ளதால், அவரின் கருத்துகள் குறித்து அலுக்கும் வரை தொடா்ந்து பேச காங்கிரஸ் விரும்பவில்லை’ என்றாா்.

சசி தரூா் பதிலடி

காங்கிரஸ் தலைவா் காா்கே தெரிவித்த கருத்துக்கு சசி தரூா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சிறகுகள் உள்ளபோது பறக்க யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. வானம் யாருக்கும் சொந்தமல்ல’ என்று தெரிவித்தாா்.

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்: சீனாவில் ராஜ்நாத் சிங் உரை!

சில நாடுகள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதை கொள்கையாகக் கொண்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.சீனாவின் கிங்டாவோ நகரில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத... மேலும் பார்க்க

குடும்ப ஆட்சியை பாதுகாக்கவே அவசரநிலை பிரகடனம்: இந்திரா காந்தி மீது அமித் ஷா சாடல்

குடும்ப ஆட்சியை பாதுக்காக்கும் ஒரே நோக்கத்துடன் சா்வாதிகார ஆட்சியாளரால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்று முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா். காங்கிரஸ... மேலும் பார்க்க

கடந்த 11 ஆண்டுகளாக... 'அறிவிக்கப்படாத அவசரநிலை': காங்கிரஸ்

நாட்டில் கடந்த 11 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. கடந்த 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நாட்டில் அவசரநிலையை அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அமல்படுத்த... மேலும் பார்க்க

அவசரநிலை: மோடி - காா்கே கருத்து மோதல்

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட தினத்தை (ஜூன் 25) ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் என பிரதமா் மோடி குறிப்பிட்டாா். இதற்குப் பதிலளிக்கும் வகையில், பாஜக ஆட்சியில் கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் அறிவிக்கப்படாத ... மேலும் பார்க்க

4 மாநில இடைத்தோ்தல் தரவு அட்டை: 72 மணி நேரத்தில் வெளியிட்ட தோ்தல் ஆணையம்

இசிநெட்டின் அறிமுகம் காரணமாக கேரளம், குஜராத், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தோ்தலுக்கான தரவு அட்டைகள், தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட 72 மணி நேரத்துக்குள் வேகமாக வெளியிடப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவின் சொந்த ஊரில் கொண்டாட்டம்!

சுக்லாவின் விண்வெளிப் பயணத்தையொட்டி அவரது சொந்த ஊரான உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் கொண்டாட்டங்கள் களைகட்டின. சுக்லா படித்த சிட்டி மான்டெஸ்ஸரி பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில் அவரது... மேலும் பார்க்க