செய்திகள் :

மகாராஷ்டிரத்துக்கு வெளிநாட்டு நிதி பெற அனுமதி! கேரளத்துக்கு மட்டும் ஏன் மறுப்பு?

post image

கேரளத்துக்கு மறுக்கப்பட்ட நிதியுதவி, மகாராஷ்டிரத்துக்கு அனுமதிக்கப்பட்டது ஏன் என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மழை வெள்ளம், வறட்சி மற்றும் தீ விபத்துகள் போன்ற இயற்கை பேரிடா்களின்போது பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கும் மகாராஷ்டிர மாநில முதல்வா் நிவாரண நிதிக்கு, வெளிநாட்டு நிதி பெறும் வகையில், வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010-இன்கீழ் (எஃப்சிஆா்ஏ) உரிமம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டில் கேரளத்துக்கு வெளிநாட்டு நிதி பெற மறுத்த மத்திய அரசு, தற்போது மகாராஷ்டிரத்துக்கு மட்டும் வழங்கியது ஏற்கக் கூடியதாக இல்லை என்று சமூக ஊடகங்களில் இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டில் கேரளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த பேரிடருக்கு நிவாரண நிதியாக 2.85 பில்லியன் டாலர் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

இந்த பேரிடருக்கு ஐக்கிய அரபு அமீரகம் 100 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க முன்வந்தது. இருப்பினும், வெளிநாடுகளில் நிதி பெறுவது என்பது நன்றாக இல்லை என்றுகூறி, அதனை இந்தியா மறுத்து விட்டது.

கேரளத்தை சேர்ந்தவர்கள் கத்தார், தாய்லாந்து, மாலத்தீவுகளிலும் பணிபுரிவதால், அந்த நாடுகளும் நிதியுதவி அளிக்க முன்வந்தன.

இதையும் படிக்க:சசி தரூர் விளக்கத்தால் பாகிஸ்தானுக்கு கொலம்பியா தெரிவித்த இரங்கல் வாபஸ்

பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்: நிதியை என்ன செய்கிறது பாக்.? இந்திய எம்.பி.க்கள் குழு கேள்வி

லண்டன்: இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்காக ரவி சங்கர் பிரசாத் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு பிரிட்டனுக்கு சென்றுள்ளது. ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத... மேலும் பார்க்க

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை!

புது தில்லி: பஞ்சாபில் பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சண்டீகரில் உள்ள் ஹல்லோ மஜ்ரா பகுதியில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. கடந்தாண்டு ஜனவரி 19-ஆம் தேதி ஹல்லோ மஜ்... மேலும் பார்க்க

டிரம்ப்பிடம் சரணடைந்துவிட்டார் பிரதமர் மோடி! - ராகுல் விமர்சனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்துவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் நடந்த காங்கிரஸ் தொழிலாளர் மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் த... மேலும் பார்க்க

கமல் மன்னிப்பு கேட்டே ஆகணும்! -கர்நாடக திரைப்பட சம்மேளனம் திட்டவட்டம்

பெங்களூரு: கன்னட மொழி சர்ச்சைக்குப்பின் ’தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகத்தில் வெளியிடப்படுவது குறித்த விவகாரத்தில் நடிகர் கமல் ஹாசன் தாம் தெரிவித்த கருத்துகளுக்கு கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டுமென கர்... மேலும் பார்க்க

உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம்: கனிமொழி எம்.பி.

சென்னை: இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே கணவன் திட்டமா? பாஜகவை விமர்சித்த பஞ்சாப் முதல்வர்!

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தேர்தல் பிரசாரத்தில் பாஜக பயன்படுத்தி வாக்கு அரசியலில் ஈடுபடுவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியாணாவில் இடைத்தேர்தல... மேலும் பார்க்க