செய்திகள் :

மகாராஷ்டிரம்: மசூதியில் ஜெலட்டின் குச்சிகள் வெடிப்பு; 2 பேர் கைது

post image

மகாராஷ்டிரத்தில் மசூதியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள மசூதியில் கைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென வெடித்தன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், இதில் கட்டடத்தின் உள் பகுதி சேதமடைந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் மீது சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். சம்பவம் குறித்து கிராமத் தலைவர் அதிகாலை 4 மணியளவில் தலவாடா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும், பீட் காவல் கண்காணிப்பாளர் நவ்னீத் கன்வத் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

செவிலியர்கள் அலட்சியம்! பிறந்த குழந்தை பலி!

பின்னர் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவு மற்றும் தடயவியல் அறிவியல் குழுவும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். நபர் ஒருவர் மசூதியின் பின்புறம் இருந்து உள்ளே நுழைந்து அங்கு சில ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது வெடிப்பை ஏற்படுத்தியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. சட்டம் ஒழுங்கு தொடர்பான எந்த பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க கிராமத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்குவங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். வக்ஃப் விவகாரங்கள... மேலும் பார்க்க

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க

ராம நவமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

மும்பை: ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதில் முதன்மையானதாக அறியப்படும் இஸ்கான் பிவாண்டி கோயிலில் வரவிருக்கும் ராம நவமி விழாவைக் கொண்டாடச் சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது .இந்தாண்டு ஏப்ரல் 6-ம் தேதி ராம ... மேலும் பார்க்க

பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!

பாஜக தேசிய தலைவர் தேர்வு தொடர்பாக மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இடையே காரசார வாதம் நிகழ்ந்தது.மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா ... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க