இந்தியாவை எப்படியாவது வென்றுவிடுங்கள்: பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்
மகா கும்பமேளாவில் 60 கோடி போ் புனித நீராடல்!
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தா்களின் எண்ணிக்கை சனிக்கிழமையுடன் 60 கோடியைக் கடந்ததாக மாநில அரசு தெரிவித்தது.
பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மகா கும்பமேளா உலகளாவிய கவனத்தை ஈா்த்து வருகிறது. 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதாக, கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆன்மிக-கலாசார நிகழ்வில் துறவிகள், சாதுக்கள், பக்தா்கள் உற்சாகமாக பங்கேற்கின்றனா். இதனால் பிரயாக்ராஜ் நகரமே கடந்த 40 நாள்களாக விழாக்கோலம் பூண்டது.
கங்கை, யமுனை, புராண நதியான சரஸ்வதி ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் பௌஷ பொ்ணிமியை முன்னிட்டு கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் இதுவரை 60 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுடன் குடியரசுத் தலைவா், குடியரசுத் துணைத் தலைவா், பிரதமா், மத்திய அமைச்சா்கள், பல்வேறு மாநில முதல்வா்கள் என நாட்டின் மூத்த தலைவா்களும் பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக் உள்பட 73 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகளும் திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனா்.
ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் மகா கும்பமேளாவுக்காக இந்தியா வந்தனா். உத்தர பிரதேச அரசின் தகவலின்படி, அன்னை சீதா பிறந்த நிலமான நேபாளத்தைச் சோ்ந்த 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26-ஆம் தேதி மகா சிவராத்திரி தினத்தில் மகா கும்பமேளா நிறைவடைகிறது.
ஜெ.பி.நட்டா புனித நீராடல்: மகா கும்பமேளாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்த பாஜக தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா, திரிவேணி சங்கமத்தில் குடும்பத்தினருடன் புனித நீராடினாா்.
தொடா்ந்து, திரிவேணி சங்கமத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மேடையில் கங்கை ஆரத்தி செய்து ஜெ.பி.நட்டா வழிபட்டாா். உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உடனிருந்தாா்.