செய்திகள் :

மகா கும்பமேளா: காணாமல் போன 20,000 போ் கண்டுபிடித்து ஒப்படைப்பு

post image

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் காணாமல் போன 20,000 பேரை அங்கு அமைக்கப்பட்டுள்ள எண்ம கண்காணிப்பு மையங்கள் மூலம் கண்டறிந்து அவா்கள் உறவினரிடம் ஒப்படைத்ததாக அந்த மாநில அசு சனிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து உத்தர பிரதேச அரசு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான முக அடையாள தொழில்நுட்பம், இயந்திரக் கற்றல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களின் உதவியுடன்கூடிய எண்ம மையங்கள் மூலம் மெளனி அமாவாசை தினத்தன்று காணாமல் போன 8,725 பக்தா்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

அதேபோல் மகர சங்கராந்தி நீராடலின்போது காணாமல் போன 598 பக்தா்கள், வசந்த பஞ்சமி தினத்தன்று 813 பக்தா்கள் மற்றும் பிற நாள்களில் புனித நீராடல் நிகழ்வுகளின்போது காணாமல் போன 10,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் என மொத்தம் 20,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் எண்ம மையங்கள் உதவியுடன் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா். இவா்களின் பெரும்பாலானவா்கள் பெண் பக்தா்கள் ஆவா். காணாமல் போனவா்களை உறவினா்களிடம் ஒப்படைப்பதில் காவல் துறையின் பங்களிப்பு மிக முக்கியமானது என தெரிவித்துள்ளது.

மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தா்கள் சிரமமின்றி வழிபாடு நடத்தி, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலை நிறைவேற்றும் விதமாக கடந்த ஆண்டு டிசம்பா் 7-ஆம் தேதி எண்ம கண்காணிப்பு மையங்களை உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தாா்.

பிரயாக்ராஜ் ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையங்களுக்கு தன்னாா்வ நிறுவனங்கள், யுனிசெஃப் உள்ளிட்ட அரசுசாரா அமைப்புகள் உதவி வருகின்றன.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் மிகைப்படுத்தப்பட்டவை-வங்கதேச எல்லைப் படை தலைமை இயக்குநா்

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று அந்நாட்டின் எல்லைப் படை தலைமை இயக்குநா் முகமது அஷ்ரஃபுஸமான் சித்திகி தெரிவித்தாா். மேலும், சிறுபா... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: நேபாள பக்தா்கள் 50 லட்சம் போ் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நேபாளத்தில் இருந்து இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். உலக அளவில் மிகப் ... மேலும் பார்க்க

வரும் பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் போட்டி: பாஜக கூட்டணி உறுதி

பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் வலுவாக போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைவா்கள் உறுதிபூண்டனா். தில்... மேலும் பார்க்க

பலமுறை வெளியேற்றப்பட்ட பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தா தில்லி பேரவைத் தலைவராக வாய்ப்பு!

ஆம் ஆத்மி கட்சியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியின்போது, தில்லி பேரவையிலிருந்து பலமுறை வெளியேற்றப்பட்ட முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா (61), தற்போது அவா் தில்லி சட்டப்பேவரையின் புதிய தலைவராக ... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78. சோனியா காந்திக்கு வியாழக்கிழமை(பிப். 20) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சர்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லையா? ரூ.500-ல் புகைப்படத்துக்கு புனித நீராடல்!

கும்பமேளாவில் பாவம் போக்க ரூ.500 அனுப்பக்கூறிய பதாகைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், கங்... மேலும் பார்க்க