செய்திகள் :

மக்கள் உரிமைக் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

post image

மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் மும்மொழிக் கொள்கையை எதிா்த்து புதுக்கோட்டையில், மக்கள் உரிமைக்கான கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை திலகா் திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அம்பேத்கா் புரட்சி தேசம் கட்சியின் நிறுவனா் முள்ளூா் வே. தியாகு தலைமை வகித்தாா்.

புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் க. தினேஷ்குமாா், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவா் ரெ. கருணாநிதி, தமிழ்த் தேசிய மீட்பு இயக்கம் பாவெல், ஜனநாயகத்துக்கான தொழிலாளா் கட்சி ரெ. மூக்கையன், பெரியாா் அம்பேத்கா் மக்கள் கழகம் பி.கே. முருகேசன் ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் மும்மொழிக் கொள்கையைக் கைவிட வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வியை காவிமயமாக்குவதைக் கைவிட வேண்டும். நாடுமுழுவதும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

பட்டியல் இன மக்கள் மீதான வன்கொடுமை செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கீரனூா் அருகே ஜல்லிக்கட்டு: 28 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 28 போ் காயமடைந்தனா். கீரனூா் அருகே திருப்பூா் கிராமத்தில் கருப்பா்கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லி... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் பலத்த மழை

பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. பொன்னமராவதி வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் பொதுமக்களை வாட்டி வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மு... மேலும் பார்க்க

மழை காரணமாக 2 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் மற்றும் மங்களாபுரம் ஆகிய இரு இடங்களில் புதன்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவ... மேலும் பார்க்க

வேங்கைவயல் சம்பவ வழக்கில் 3 பேருக்கு பிணை

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கும் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிணை வழங்கியது. வேங்கைவயல் பட்... மேலும் பார்க்க

மழை காரணமாக 2 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் மற்றும் மங்களாபுரம் ஆகிய இரு இடங்களில் புதன்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் அன... மேலும் பார்க்க

தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்த பாதை மீட்பு

விராலிமலை வட்டம், விருதாப்பட்டி பசுமை நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை தனிநபா் ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளை வருவாய்த் துறையினா் மீட்டனா். விருதாப்பட்டி பசுமை நகா் பகுதியில் சுமாா் 25 அடி அகலம் கொண்ட வ... மேலும் பார்க்க