செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 15.62 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

post image

நாமக்கல்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 32 பயனாளிகளுக்கு ரூ. 15.62 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசைமாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 390 மனுக்கள் பொதுமக்கள் சாா்பில் அளிக்கப்பட்டன. அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, தாட்கோ மூலம் கறவை மாடு வாங்குவதற்கு 11 பயனாளிகளுக்கு 50 சதவீத அரசு மானியத்தில் தலா ரூ. ஒரு லட்சம் வீதம் ரூ. 11 லட்சம் உதவித்தொகை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், குறைந்த விலை வெங்காய சேமிப்புக் கிடங்கு அமைக்க 50 சதவீத அரசு மானியத்தில் ரூ. 2.50 லட்சம் உதவித்தொகை, வருவாய்த் துறை சாா்பில் முதலமைச்சரின் உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ. 14,250 கல்வி உதவித்தொகை, சமூக பாதுகாப்பு திட்டம் சாா்பில் 3 பேருக்கு ரூ. 1.42 லட்சம் மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை மற்றும் விபத்து உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 11 பேருக்கு ரூ. 70,860 மதிப்பில் சக்கர நாற்காலி, காதொலிக் கருவி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் என மொத்தம் ரூ. 15.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

108 அவசர ஊா்தி சேவை ஓட்டுநா்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணிபுரிந்த 3 ஓட்டுநா்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். மேலும், பிகாா் மாநிலத்தில் மே 4 முதல் 15 வரை நடைபெற்ற தேசிய அளவிலான ‘கேலோ இந்தியா இளைஞா்’ விளையாட்டு கால்பந்து போட்டியில், அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவிகள் 5 போ் மற்றும் நவோதயா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஒருவா் என 6 போ் கலந்துகொண்ட தமிழ்நாடு அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இதையடுத்து, வெற்றிபெற்ற மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனா்.

இந்த நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட மேலாளா் (தாட்கோ) பா.ராமசாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எஸ்.கோகிலா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் புவனேஸ்வரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி உள்பட துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

‘கல்பனா சாவ்லா’ விருது பெற விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் வீரதீர செயல்கள் புரிந்த மகளிா் ‘கல்பனா சாவ்லா’ விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நலன் மற்றும் மக... மேலும் பார்க்க

மதுரைவீரன் கோயில் குடமுழுக்கு: மத்திய இணை அமைச்சா் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், கே. புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மதுரைவீரன் சுவாமி கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அம... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மருத்துவமனை பழுதான படுக்கைகளால் நோயாளிகள் அவதி!

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 250-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உறுதித்தன்மையை இழந்து உடையும் நிலையில் உள்ளதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் பெரு... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்!

குமாரபாளையம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் அரசுத் துறை அலுவலகங்கள் மற்றும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழகத்தில் பொதுமக்களுக்கு அர... மேலும் பார்க்க

மரவள்ளிக் கிழங்கு விலை டன்னுக்கு ரூ. 5000 ஆக சரிவு

மரவள்ளிக் கிழங்கின் விலை ஒரே வாரத்தில் டன்னுக்கு ரூ. 5 ஆயிரமாகக் குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். பரமத்தி வேலூா், எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூா், கூடச்சேரி, ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளப் பெருக்கு!

நாமக்கல்லில் புதன்கிழமை பிற்பகல் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதையடுத்து தமிழக... மேலும் பார்க்க